16 17
இலங்கைசெய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சைத்தாள் விவகாரம்: பரீட்சை திணைக்களத்திற்கு முன்பு பரபரப்பு

Share

புலமைப்பரிசில் பரீட்சைத்தாள் விவகாரம்: பரீட்சை திணைக்களத்திற்கு முன்பு பரபரப்பு

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் தாளில் இருந்து 03 வினாக்களை நீக்கி இறுதி புள்ளிகளை கணக்கிடுவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பரீட்சை திணைக்களத்திற்கு முன்பாக பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த போராட்டமானது, இன்று (18.09.2024) முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன்போது, பெற்றோர், சர்ச்சையை ஏற்படுத்திய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளடன் பரீட்சை திணைக்களத்திற்குள் சென்று கடிதம் ஒன்றினையும் ஒப்படைத்துள்ளனர்.

இந்நிலையில், போராட்ட களத்திற்கு, பொலிஸார் மற்றும் கலகத் தடுப்புப் பிரிவினரும் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கடந்த ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெற்றது.

குறித்த பரீட்சை ஆரம்பமாக சில நிமிடங்களுக்கு முன்னர் பிரதேசத்தில் உள்ள ஆசிரியர் ஒருவர் பரீட்சையின் முதல் தாளில் உள்ள சில வினாக்களுக்கு நிகரான வினாக்கள் கொண்ட மாதிரிதாள் ஒன்றை வட்ஸப் செயலியில் பதிவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து, சம்பவம் குறித்து, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, வினாத்தாள் தயாரித்த நிபுணர்கள் குழுவின் இணக்கப்பாட்டுடன் தொடர்புடைய 03 வினாக்களை நீக்கி இறுதி புள்ளிகளை வழங்க பரீட்சை திணைக்களம் நேற்று தீர்மானித்திருந்தது.

இந்நிலையிலேயே, தற்போது இத்தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 30
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கிரிக்கெட் திருவிழா: 15 தனியார் ஜெட் விமானங்களில் இலங்கை வந்தடைந்த உலகளாவிய விஐபிக்கள்!

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நேற்று முன்தினம் (15) நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தியா –...

image 1200x800 23
செய்திகள்உலகம்

ஜெனீவா பேச்சுவார்த்தைக்கு மத்தியில் போர் தீவிரம்! – ரஷ்ய துறைமுகம் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; ஒடேசா இருளில் மூழ்கியது!

ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கி நான்கு ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, அமெரிக்காவின் முன்னிலையில் ஜெனீவாவில் இன்று...

image 1200x800 24
செய்திகள்இலங்கை

ஊழலுக்கு எதிரான போரில் இலங்கையின் மகா பாய்ச்சல்! -அநுர அரசாங்கத்திற்கு மக்கள் பாராட்டு!

கடந்த 70 வருட கால அரசியல் வரலாற்றில் ஊழல் நிறைந்த நாடாகப் பார்க்கப்பட்ட இலங்கை, அநுர...