16 17
இலங்கைசெய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சைத்தாள் விவகாரம்: பரீட்சை திணைக்களத்திற்கு முன்பு பரபரப்பு

Share

புலமைப்பரிசில் பரீட்சைத்தாள் விவகாரம்: பரீட்சை திணைக்களத்திற்கு முன்பு பரபரப்பு

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் தாளில் இருந்து 03 வினாக்களை நீக்கி இறுதி புள்ளிகளை கணக்கிடுவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பரீட்சை திணைக்களத்திற்கு முன்பாக பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த போராட்டமானது, இன்று (18.09.2024) முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன்போது, பெற்றோர், சர்ச்சையை ஏற்படுத்திய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளடன் பரீட்சை திணைக்களத்திற்குள் சென்று கடிதம் ஒன்றினையும் ஒப்படைத்துள்ளனர்.

இந்நிலையில், போராட்ட களத்திற்கு, பொலிஸார் மற்றும் கலகத் தடுப்புப் பிரிவினரும் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கடந்த ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெற்றது.

குறித்த பரீட்சை ஆரம்பமாக சில நிமிடங்களுக்கு முன்னர் பிரதேசத்தில் உள்ள ஆசிரியர் ஒருவர் பரீட்சையின் முதல் தாளில் உள்ள சில வினாக்களுக்கு நிகரான வினாக்கள் கொண்ட மாதிரிதாள் ஒன்றை வட்ஸப் செயலியில் பதிவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து, சம்பவம் குறித்து, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, வினாத்தாள் தயாரித்த நிபுணர்கள் குழுவின் இணக்கப்பாட்டுடன் தொடர்புடைய 03 வினாக்களை நீக்கி இறுதி புள்ளிகளை வழங்க பரீட்சை திணைக்களம் நேற்று தீர்மானித்திருந்தது.

இந்நிலையிலேயே, தற்போது இத்தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
25 691b58dca001e
செய்திகள்அரசியல்இலங்கை

பசில் ராஜபக்சவுக்கு நவ. 21இல் நீதிமன்றத்தில் முன்னிலையாக உத்தரவு: அமெரிக்காவில் சிகிச்சையிலுள்ளவர் திரும்புவாரா என்ற சந்தேகம்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நிறுவனர் பசில் ராஜபக்ச, சட்டவிரோதமாகப் பெறப்பட்ட ரூ. 50 மில்லியன்...

25 691be54fdfdbd
செய்திகள்அரசியல்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: முறையாகப் பதிவுசெய்யப்பட்ட விகாரை அகற்றப்பட்டதைக் கண்டித்து அமரபுர மகா நிக்காய தலைமை தேரர் ஜனாதிபதிக்குக் கடிதம்!

திருகோணமலையில் புத்தர் சிலை அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில், இலங்கை அமரபுர மகா நிக்காயவின் தலைமை நாயக்க...

Vijayakanth Viyaskanth SRH IPL 2024 1
செய்திகள்விளையாட்டு

பாகிஸ்தான் இருபதுக்கு 20 முத்தரப்புத் தொடர்: இளம் சுழற்பந்து வீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த் இணைவு!

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள இருபதுக்கு 20 முத்தரப்புத் தொடருக்கான இலங்கை தேசிய ஆடவர் அணியில், இளம் சுழற்பந்து...

67e090cde912a.image
உலகம்செய்திகள்

கனடாவின் நகர மண்டபங்களில் பாலஸ்தீனியக் கொடி: இஸ்ரேல் ஆதரவுக் குழுவின் தஃப்சிக் அமைப்பு தடை கோரி நீதிமன்றம் நாடியது!

கனடாவின் பல நகரங்களின் நகர மண்டபங்களில் பாலஸ்தீனியக் கொடிகள் ஏற்றப்பட்டுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து...