25 683bc7c6b9af4
இலங்கைசெய்திகள்

மக்களுக்கு பொருட்களை வழங்கியவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர்

Share

மக்களுக்கு பொருட்களை வழங்கியவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளதாக சர்வஜன பலய கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் முன்னாள் ராஜாங்க அமைச்சர் நளின் பெர்னாண்டோ தண்டிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

கரம் போர்ட்களை மக்களுக்கு வழங்கிய காரணத்தினால் இருவருக்கும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் இருவரும் இந்த கரம் போர்ட்களை தங்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்லவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

திருடர்களை பிடித்து அவர்கள் கொள்ளையிட்ட பணத்தை மீளப் பெற்றுக்கொள்வதாக அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

பெரிய திருடர்களை பிடித்து களவாடப்பட்ட சொத்துக்களை மீளப் பெறும் வரையில் மக்கள் காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

திருடர்களுக்கு தண்டனை விதிப்பது சிறந்த விடயம் எனவும் அதன் ஊடாக மக்களுக்கு ஏதேனும் கிடைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

களவாடப்பட்ட பணத்தை மீளப் பெற்றுக்கொள்ள வேண்டுமென மக்கள் விரும்புகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும் கரம் மற்றும் தாம் போர்ட்களை மக்களுக்கு வழங்கிய காரணத்தினால் அந்தப் பணத்தை மீளப் பெற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

பெரிய திருடர்களை பிடித்து அவர்கள் களவாடிய சொத்துக்கள் மற்றும் பணத்தை மீளப் பெற்றுக்கொள்வதே அரசாங்கத்தின் கடமையாகும் எனவும் மக்கள் அதனையே எதிர்பார்க்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...