4 25
இலங்கைசெய்திகள்

யாழில் அரச வேலைக்காக காத்திருப்போருக்கு வெளியான அறிவிப்பு!

Share

யாழில் அரச வேலைக்காக காத்திருப்போருக்கு வெளியான அறிவிப்பு!

யாழ்.மாவட்டத்தில் (Jaffna )பிறப்பு, இறப்பு, மற்றும் விவாக பதிவாளர் (தமிழ்மொழி) பதவியில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான இறுதி திகதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பு இன்றைய தினம் (13) யாழ் மாவட்ட செயலகத்தின் ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “யாழ் மாவட்டத்தில் குறிப்பாக வட்டுக்கோட்டை, ஊர்காவற்றுறை, எழுதுமட்டுவாழ், கோப்பாய், கரவெட்டி பிரிவுகளுக்கான தமிழ்மொழி மூல பிறப்பு, இறப்பு, மற்றும் விவாகப்பதிவாளர் பதவிக்கான வர்த்தமானி அறிவித்தல் (இலக்கம்- 2415) 13-12-2024ம் திகதி பிரசுரிக்கப்பட்டு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித்திகதி 17-01-2025 என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த இறுதித் திகதியானது 17-03-2025 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதுதொடர்பான வர்தமானி அறிவித்தல் 14-02-2025ம் திகதி வெளியிடப்படும் என பதிவாளர் நாயகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....