4 5
இலங்கைசெய்திகள்

வாகன விற்பனை நிலைய உரிமையாளரிடமிருந்து அரச ஆவணங்கள் மீட்பு

Share

தனியார் வாகன விற்பனை நிலையமொன்றின் உரிமையாளரிடமிருந்து வாகனங்கள் தொடர்பான பெருமளவான அரச ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் குருநாகல் பிரதேசத்தின் வாரியபொல நகரில் இடம்பெற்றுள்ளது.

அங்குள்ள தனியார் வாகன விற்பனை நிலையமொன்றின் உரிமையாளர் ஒருவர் , மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்துக்குச் சொந்தமான வாகனங்கள் பதிவு செய்தல், உரிமையை மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களைத் தம் வசம் வைத்திருந்துள்ளார்.

அதனைக் கொண்டு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களைப் பதிவு செய்தல், உரிமை மாற்றம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகளை மேற்கொண்டு வந்துள்ளார் .

அத்துடன் கடந்த 2017ஆம் ஆண்டு அவர் சட்டவிரோதமாக இறக்குமதி செய்துள்ள மொண்டரோ ரக வாகனமொன்றை 2002ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட லொறியொன்றின் பதிவை பயன்படுத்தி வாகனத்துக்கான இலக்கத்தகடு பெற்றுக் கொண்டுள்ளார்.

இவ்வாறு பல்வேறு மோசடிகளுடன் தொடர்புடைய குறித்த வர்த்தகரை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய நிலையில், எதிர்வரும் 09ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...