35 6
இலங்கைசெய்திகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள பாடசாலை கல்விச் செயற்பாடுகள்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Share

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள பாடசாலை கல்விச் செயற்பாடுகள்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான பாடசாலையின் முதல் கட்டம் இன்று (26) ஆரம்பமாகவுள்ள நிலையில் பிள்ளைகளின் பெற்றோருக்கு விசேட அறிவுறுத்தலொன்றும் வழங்கப்பட்டுள்ளது .

2024ஆம் ஆண்டு அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை கடந்த 16ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்திருந்தது.

இதற்கமைய, மூன்றாம் தவணைக்கான முதல் கட்ட கல்விச் செயற்பாடுகள் இன்று முதல் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், பாடசாலைக்குச் செல்லும் பிள்ளைகளின் பெற்றோருக்கு விசேட அறிவுறுத்தலொன்றும் வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் மழையுடனான காலநிலை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாகப் பல நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாகச் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல், எலிக்காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.

விடுமுறைக் காலம் முடிந்து பிள்ளைகள் பாடசாலைக்குத் திரும்ப உள்ள நிலையில் உரிய சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிப்பது அவசியமாகும் எனச் சுகாதார பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொழிலதிபர்களுக்கு நில வங்கி: அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி புதிய அறிவிப்பு!

இலங்கையில் புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கவும், முதலீட்டாளர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை எளிதாக்கவும் ‘நில வங்கி’...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடாளுமன்ற பிரதி பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவின் மனு: ஜூன் 02 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தின் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பிரதிப் பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் (Writ)...

Untitled 22
செய்திகள்இலங்கை

இலங்கை – ரஷ்யா இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தை: ரஷ்யப் பிரதி வெளிவிவகார அமைச்சர் வருகை!

இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ரஷ்யக் கூட்டமைப்பின் பிரதி...

Untitled 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு காலத்தில் தட்டுப்பாடின்றி கோழி இறைச்சி: விலையைச் சீராகப் பேண நடவடிக்கை!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் சந்தையில் கோழி இறைச்சிக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாத வகையில்...