இந்த ஆண்டில் இதுவரை வாகன இறக்குமதிக்காகச் சுமார் 1.8 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடன் கடிதங்களைத் (Letter of Credit – LC) திறக்க அரசாங்கம் அனுமதி அளித்துள்ளதாக வர்த்தகம், வாணிபம் மற்றும் உணவுப் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் ஆர். எம். ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் ஆரம்பத்தில் வாகன இறக்குமதியாளர்களுக்கு $1.2 பில்லியன் டொலர் வரை கடன் கடிதங்களைத் திறக்கவே அனுமதி அளித்திருந்தது.
எனினும், கடன் கடிதங்களின் மொத்த மதிப்பு இந்த எல்லையை அடைந்தபோது, அரசாங்கம் படிப்படியாக இந்த எல்லையை $1.8 பில்லியன் டொலர் வரை அதிகரித்தது.
தற்போதைய நிலையில், இந்தத் திருத்தப்பட்ட எல்லையையும் கடன் கடிதங்கள் அடைந்துவிட்டதாகப் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அனுமதிக்கப்பட்ட மொத்த $1.8 பில்லியன் டொலர் LC-களில், இதுவரை சுமார் $1.2 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வாகனங்கள் மட்டுமே நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
“நாட்டிற்கு இதுவரை சுமார் 60% வாகனங்கள் மட்டுமே வந்தடைந்துள்ளன, அதன் பெறுமதி சுமார் $1.2 பில்லியன் டொலராகும்,” என்று பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன கூறினார்.