இலங்கைசெய்திகள்

கோட்டாபயவிற்கு முடியுமானால் ஏன் மகிந்தவிற்கு முடியாது! அரசாங்க தரப்பு பதிலடி

Share
4 9
Share

கோட்டபய ராஜபக்சவிற்கு கடிதம் இல்லாமல் தனது இல்லத்தை விட்டு வெளியேற முடிந்தால், ஏன் மகிந்த ராஜபக்சவிற்கு (Mahinda Rajapaksa) முடியாது என அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ (Nalinda Jayatissa) கேள்வியெழுப்பியுள்ளார்.

அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் இது தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் உத்தியோகப்பூர்வமாக மகிந்த ராஜபக்சவை உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறுமாறு கோரினால், அவர் வெளியேற தயாராக இருப்பதாக சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பொதுச் செயலாளர் சாகர காரியவசம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் இந்த கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தனது விஜேராம இல்லத்தை விட்டு வெளியேறுமாறு கோரி கடிதம் அனுப்ப வேண்டிய அவசியமில்லை என்றும் அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ அதன்போது தெரிவித்துள்ளார்.

அத்தோடு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இல்லம் குறித்த நீதிமன்றத் தீர்ப்பின் படி, ஒரு சட்டத்தரணியாக மகிந்த ராஜபக்ச நிலைமையைப் புரிந்து கொள்ள முடியும் என்றும் அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, அவரது சகோதரர் கோட்டபய ராஜபக்சவிற்கு கடிதம் இல்லாமல் தனது இல்லத்தை விட்டு வெளியேறு முடியுமானால், இவர் ஏன் அதற்காகக் காத்திருக்கிறார் என அமைச்சர் கேள்வியேழுப்பியதோடு, முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது துணைவியார் இருவருக்கும் பொருத்தமான மாற்று வசிப்பிடத்தையும் அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...