rtjy 249 scaled
இலங்கைசெய்திகள்

வடக்கில் இரு உத்தியோகத்தர்களின் பதவிகளை மாற்ற ஆளுநர் திட்டம்

Share

வடக்கில் இரு உத்தியோகத்தர்களின் பதவிகளை மாற்ற ஆளுநர் திட்டம்

வட மாகாண ஆளுநரின் செயலாளரான வாகீசன் மற்றும் வடமாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்) குகநாதன் ஆகியோரின் பதவிகளை மாற்றுவதற்கு வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் திட்டமிட்டுள்ளார் .

வடக்கு மாகாணத்தில் எவ்வித ஊழல் மோசடிகளில் தொடர்புபடாத நேர்மையான அதிகாரிகளை அவர்கள் வகித்த பதவிகளில் இருந்து விலக்கி கீழ் நிலைப் பதவிகளுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வட மாகாண ஆளுநரின் செயலாளராக இருந்த வாகீசனை மகளிர் விவகார அமைச்சுக்கும் மகளிர் விவகாரத்தில் அமைச்சின் செயலாளராக இருந்த ரூபினி வரதலிங்கத்தை பிரதிப் பிரதம செயலாளர் நிர்வாகத்திற்கும் மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் பிரதிப் பிரத செயலாளராக இருந்த குக நாதனை உள்ளூராட்சி அமைச்சுகும் மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த தடவை வடமாகாண ஆளுநராக பி.எஸ்.எம்.சாள்ஸ் பதவி வகித்தபோது மன்னாரில் அரச காணிகள் பகிர்ந்தாளிப்பதில் தனக்கு சார்பாக நடந்து கொள்ளவில்லை என்பதற்காக மாகாண ஆணையாளர் பதவியில் இருந்து குகநாதனை மாற்றியமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
05 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தனியார் பஸ் சேவைகளை முறைப்படுத்தக் கோரிக்கை: அத்தியாவசியமற்ற நேரங்களில் சேவைகளைக் குறைக்கத் திட்டம்

நாட்டில் நிலவும் சூழலைக் கருத்திற்கொண்டு, தனியார் பஸ்களின் பயண நேரங்களை முறைப்படுத்துமாறும், பயணிகள் வருகை குறைவாக...

02 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி சேமிப்பு நடவடிக்கை: ஒவ்வொரு புதன்கிழமையும் பொது விடுமுறையாக அறிவிப்பு

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு,...

01 16
செய்திகள்உலகம்

காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்: 400 பேர் உயிரிழப்பு என தலிபான் அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400...

21 13
செய்திகள்இலங்கை

எரிபொருள் QR குறியீட்டிற்கான போலி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான இணையதளத்தைப் போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து...