3 34
இலங்கைசெய்திகள்

வடக்கு மக்களின் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணி தொடர்பான முடிவை மாற்றிய அநுர அரசு

Share

வட மாகாணத்தில் காணித் தீர்வு தொடர்பாக, 2025, மார்ச் 28 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானியை அரசாங்கம் திரும்பப் பெற்றுள்ளது.

முன்னதாக, வட மாகாணத்தில் உள்ள பல கிராமங்களில் காணிகளை கையகப்படுத்துவது தொடர்பாக விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சகத்தின் கீழ் உள்ள காணி உரிமை தீர்வுத் திணைக்களைத்தால், வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

எனினும் அரசாங்கம், வடக்கில் மக்களின் காணிகளை, அரசாங்கம் கையகப்படுத்த முயற்சிப்பதாகக் கூறி, குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

அத்துடன், வடக்கின் அரசியல்வாதிகளும், இந்த வர்த்தமானிக்கு தங்கள் எதிர்ப்பை வெளியிட்டு வந்தனர்.

கடந்த நாடாளுமன்ற அமர்வொன்றின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தனிநபர் பிரேரணை ஒன்றினை முன்வைத்து இது குறித்து உரையாற்றியிருந்தார்.

இதனையடுத்து பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் அமைச்சர் லால்காந்த உள்ளிட்டோர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு அந்த வர்த்தமானியை மீளப்பெறுமாறு கடும் அழுத்தம் கொடுத்ததோடு விமர்சனங்களையும் முன்வைத்திருந்தனர்.

இந்த அழுத்தங்களின் பின்னரே குறித்த வர்த்தமானி மீளப்பெறப்பட்டுள்ளது.

இதேவேளை, அண்மையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனால், இது தொடர்பில் காணி உரிமையாளர்களுக்கு விளக்கமளிக்கும் வகையிலான கூட்டம் ஒன்றும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
1769359891 pak navy
செய்திகள்இலங்கை

நடுக்கடலில் தத்தளித்த இலங்கையர்: 1,500 மைல் தொலைவில் மனிதாபிமானத்துடன் மீட்டது பாகிஸ்தான் கடற்படை!

பாகிஸ்தான் கடற்கரையிலிருந்து சுமார் 1,500 கடல் மைல் தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில், கடும் உடல்...

Beijing Capital Airlines A330
செய்திகள்இலங்கை

இலங்கை – சீனா இடையே புதிய வான்வழித் தொடர்பு: பெய்ஜிங் கெபிடல் எயார்லைன்ஸ் விமானம் கட்டுநாயக்க வருகை!

இலங்கை மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான வான்வழித் தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் வகையில்,...

9c76037bfb42191521634b808e1834c1
உலகம்செய்திகள்

அமெரிக்காவில் அதிரடி: 30 இலட்சம் பக்கங்கள், 2,000 காணொளிகள் – எப்ஸ்டீன் கோப்புகளை வெளியிட்டது நீதித்துறை!

அமெரிக்காவின் பிரபல நிதி ஆலோசகரும், பாலியல் குற்றவாளியுமான மறைந்த ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான...

MediaFile 1 9
செய்திகள்இலங்கை

டித்வா புயல் பாதிப்பு: மீளமைப்புப் பணிகளுக்காக மேலும் 10 பெய்லி பாலங்களை வழங்கியது இந்தியா!

டித்வா புயலினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் சேதமடைந்த போக்குவரத்து உட்கட்டமைப்புகளைச் சீரமைக்கும் நோக்கில், இந்தியா மேலும் 10...