இலங்கைசெய்திகள்

வாகன இறக்குமதியாளர்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

4 36
Share

வாகன இறக்குமதியாளர்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

இறக்குமதி செய்யப்பட்டு மூன்று மாதங்களுக்கு மேல் விற்காமல் வைத்திருக்கும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த விதிமுறைக்கமைய, பேருந்துகள், கிரேன்கள், கல்லி போவர் போன்ற சிறப்பு நோக்க வாகனங்கள் மற்றும் சிறிய கார்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படவுள்ளது.

கடந்த 18ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் படி, முதல் கட்ட வாகன இறக்குமதி தாராளமயமாக்கல் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சுங்க ஆவணங்களை சமர்ப்பித்த 90 நாட்களுக்குள் நுகர்வோருக்காக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை பதிவு செய்வதற்கு வாகன இறக்குமதியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் எனவும் வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு 90 நாட்களுக்குள் பதிவு செய்யப்படவில்லை எனில், வாகனங்களின் காப்பீட்டு மதிப்பில் 3 சதவீதம் மாதாந்திர அபராதம் விதிக்கப்படும்.

மேலும், ஒருவர் தனது பெயரில் வாகனத்தை பதிவு செய்தால், அதனை மூன்று ஆண்டுகளுக்கு மாற்ற முடியாது என்பதோடு தாமதக் கட்டணம் செலுத்தாமல் எந்த வாகனத்தையும் மோட்டார் போக்குவரத்துத் துறையில் பதிவு செய்ய முடியாது எனவும் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாமதக் கட்டணம் செலவு, காப்பீடு மற்றும் வாகன விலையின் 45 சதவீதம் ஆகும்.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...