24 668aae2e0fddd 6
இலங்கைசெய்திகள்

மக்களுக்கு பேரிடி: நாளை முதல் இடைநிறுத்தப்படும் அரச சேவைகள்

Share

மக்களுக்கு பேரிடி: நாளை முதல் இடைநிறுத்தப்படும் அரச சேவைகள்

சுகவீன விடுமுறையில் நாளை (08) மற்றும் நாளை மறுதினம் (09) பணிக்கு சமூகமளிப்பதில்லை என 200 இற்கும் மேற்பட்ட அரச சேவை சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

அவற்றில் கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் நில அளவை தொழிற்சங்கங்களும் அடங்கும் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, எதிர்வரும் ஜூலை மாதம் 09ஆம் திகதி சுகவீன விடுமுறையில் பணிக்கு வருவதில்லை என அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களும் தீர்மானித்துள்ளன.

இதேவேளை, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (7) நள்ளிரவு முதல் நாளை (9) நள்ளிரவு வரை 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்க தபால் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

இதன் போது, இன்று (07) மாலை 4.00 மணி முதல் மத்திய தபால் பரிவர்த்தனையிலும், இன்று நள்ளிரவு முதல் அனைத்து தபால் நிலையங்களிலும் அடையாள வேலைநிறுத்தம் ஆரம்பிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
1276730 0.jpeg
செய்திகள்உலகம்

ஈரான் சிறைப்பிடித்த எண்ணெய்க் கப்பல் ‘தலாரா’ விடுவிப்பு: 21 பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்!

ஹாா்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் கடந்த வாரம் சிறைப்பிடித்த, மாா்ஷல் தீவுகளின் கொடியேற்றப்பட்ட ‘தலாரா’ (Talara)...

pm modi 13 20251119144744
இந்தியாசெய்திகள்

ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்குப் பயணம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்கு விஜயம் செய்யத் தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன....

images 5 7
செய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: கால் தவறி கிணற்றில் வீழ்ந்த வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் நபரொருவர் கால் தவறி கிணற்றுக்குள் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்...

images 4 8
இலங்கைசெய்திகள்

அரச மருத்துவமனைகளில் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு: சிகிச்சை சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

அரச மருத்துவமனைகளில் சுமார் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...