24 6607fa3d1f38d
இலங்கைசெய்திகள்

அரச பாடசாலைகள் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பு

Share

அரச பாடசாலைகள் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பு

எதிரவரும் காலங்களில் அரச பாடசாலைகள் மூன்று வகையாக பிரிக்கப்பட்டு செயற்படுத்தப்பட உள்ளன என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Sushil Premajayantha) அறிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தரம் 1-5 வரையான வகுப்புக்களைக் கொண்ட பாடசாலைகள் ஆரம்ப பாடசாலைகளாக வரையறுக்கப்படவுள்ளன.

இப்பாடசாலைகளின் அதிபராக இலங்கை அதிபர்கள் சேவையின் 3ஆம் (SLPS) தரத்தினை பூர்த்தி செய்தவர்கள் நியமிக்கப்படுவார்கள்.

மேலும், தரம் 6-9 வரையான வகுப்புக்களைக் கொண்ட பாடசாலைகள் கனிஷ்ட இடை நிலை (Junior Secondary) பாடசாலைகளாக வரையறுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இப்பாடசாலைகளின் அதிபராக இலங்கை அதிபர்கள் சேவையின் 2ஆம் தரத்தினை பூர்த்தி செய்தவர்கள் நியமிக்கப்படுவார்கள்.

தரம் 10-13 வரையான வகுப்புக்களைக் கொண்ட பாடசாலைகளை சிரேஷ்ட இடை நிலை (Senior Secondary) பாடசாலைகளை மறுசீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இப்பாடசாலைக்கு அதிபராக தர இலங்கை அதிபர்கள் சேவையின் 1ஆம் தரத்தினை பூர்த்தி செய்தவர்கள் நியமிக்கப்படுவார்கள்.

இதற்கமைய, நாடளாவிய ரீதியிலுள்ள 10000இற்கும் மேற்பட்ட சகல பாடசாலைகளும் மீளமைக்கப்படும்.

இவற்றை பராமரிக்க 120 கல்வி வலயங்கள் காணப்படுவதோடு, ஏற்கனவே உள்ள 100 கல்வி வலயங்களின் எண்ணிக்கையில் 20 புதிய கல்வி வலயங்கள் உருவாக்கப்படும். இவை யாவும் கல்வி சீர்திருத்தத்திற்குட்பட்ட ஏற்பாடுகளாகும்.” என விளக்கம் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
19 4
செய்திகள்உலகம்

ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்காக வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சிறப்புப் பிரார்த்தனை!

ஈரானுடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புப்...

20 6
செய்திகள்உலகம்

பாபா வாங்காவின் உலகப்போர் கணிப்புடன் ஒத்துப் போகிறதா தற்போதைய ஈரான்-இஸ்ரேல் மோதல்? அச்சத்தில் உலக நாடுகள்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், புகழ்பெற்ற பல்கேரியத் தீர்க்கதரிசி பாபா வாங்கா...

21 6
செய்திகள்உலகம்

ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்களை மீட்ட இலங்கை: ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானியக் கப்பல் மற்றும் அதில் இருந்த பணியாளர்களை மீட்பதற்காக...

24 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளின் தகவல்கள் புதுப்பிப்பு: மார்ச் 28 வரை கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023) விண்ணப்பித்த பயனாளிகள் மற்றும் நன்மைகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள்...