24 6607fa3d1f38d
இலங்கைசெய்திகள்

அரச பாடசாலைகள் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பு

Share

அரச பாடசாலைகள் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பு

எதிரவரும் காலங்களில் அரச பாடசாலைகள் மூன்று வகையாக பிரிக்கப்பட்டு செயற்படுத்தப்பட உள்ளன என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Sushil Premajayantha) அறிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தரம் 1-5 வரையான வகுப்புக்களைக் கொண்ட பாடசாலைகள் ஆரம்ப பாடசாலைகளாக வரையறுக்கப்படவுள்ளன.

இப்பாடசாலைகளின் அதிபராக இலங்கை அதிபர்கள் சேவையின் 3ஆம் (SLPS) தரத்தினை பூர்த்தி செய்தவர்கள் நியமிக்கப்படுவார்கள்.

மேலும், தரம் 6-9 வரையான வகுப்புக்களைக் கொண்ட பாடசாலைகள் கனிஷ்ட இடை நிலை (Junior Secondary) பாடசாலைகளாக வரையறுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இப்பாடசாலைகளின் அதிபராக இலங்கை அதிபர்கள் சேவையின் 2ஆம் தரத்தினை பூர்த்தி செய்தவர்கள் நியமிக்கப்படுவார்கள்.

தரம் 10-13 வரையான வகுப்புக்களைக் கொண்ட பாடசாலைகளை சிரேஷ்ட இடை நிலை (Senior Secondary) பாடசாலைகளை மறுசீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இப்பாடசாலைக்கு அதிபராக தர இலங்கை அதிபர்கள் சேவையின் 1ஆம் தரத்தினை பூர்த்தி செய்தவர்கள் நியமிக்கப்படுவார்கள்.

இதற்கமைய, நாடளாவிய ரீதியிலுள்ள 10000இற்கும் மேற்பட்ட சகல பாடசாலைகளும் மீளமைக்கப்படும்.

இவற்றை பராமரிக்க 120 கல்வி வலயங்கள் காணப்படுவதோடு, ஏற்கனவே உள்ள 100 கல்வி வலயங்களின் எண்ணிக்கையில் 20 புதிய கல்வி வலயங்கள் உருவாக்கப்படும். இவை யாவும் கல்வி சீர்திருத்தத்திற்குட்பட்ட ஏற்பாடுகளாகும்.” என விளக்கம் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...