இந்த ஆண்டின் முதல் அரையாண்டில் அன்பளிப்புகள் நீங்கலாக அரசாங்கத்தின் மொத்த வருமானம் 2,321.7 பில்லியன் ரூவாக அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சு வெளியிட்டுள்ள அண்மைய அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி, 2024 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 1,860.6 பில்லியனாக இருந்த அரச வருமானம், 2025 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் 24.8% அதிகரித்து 2,321.7 பில்லியன் ரூபாவை எட்டியுள்ளது.
இந்த அரச வருமான உயர்வுக்கு வரி வருமானம் பிரதான பங்களிப்பை வழங்கியுள்ளது.
அதற்கமைய, 2025 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் வரி வருமானம் 2,151.1 பில்லியன் ரூபாவாக 25.9% அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது கடந்த ஆண்டின் முதல் அரையாண்டு காலப்பகுதியில் 1,709.3 பில்லியன் ரூபாயாக காணப்பட்டுள்ளது.
இந்த வரி வருமான அதிகரிப்புக்கு மோட்டார் வாகனங்களுக்கான உற்பத்தி வரி வருமானம், பெறுமதி சேர் வரி வருமானம், சுங்க இறக்குமதி வரிகள், வருமான வரி, விசேட வணிகப் பொருட்கள் மீதான வரிகள், சமூகப் பாதுகாப்பு வரிகள், பெற்றோலியப் பொருட்கள் மூலம் கிடைத்த வரிகள், மதுவரி வருமானம், மற்றும் செஸ் வரி போன்ற பல காரணிகள் முக்கியமாகப் பங்களித்துள்ளன.

