தனியார் மற்றும் அரை அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியம்: EPF நிதியில் மாற்றமில்லை என அரசாங்கம் உறுதி!

Untitled 113 2

தனியார் மற்றும் அரை அரசு துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் எதிர்காலப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், அவர்களுக்கெனப் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் தீவிரமாக ஆராய்ந்து வருவதாகத் தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், கடந்த சில நாட்களாக நிலவி வந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விளக்கங்களை அளித்தார்:

ஊழியர் சேமலாப நிதி (EPF) என்பது ஊழியர்களின் சமூகப் பாதுகாப்புக்கானது. அதனை ஓய்வூதியத் திட்டமாக மாற்றப்போவதாகத் தான் ஒருபோதும் கூறவில்லை என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

தனது முந்தைய அறிக்கை தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும், EPF மற்றும் ETF ஆகிய நிதிகள் அவற்றின் தற்போதைய நிலையிலேயே தொடரும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போதுள்ள நிதிகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில், தனியார் மற்றும் அரை அரசு துறை ஊழியர்களுக்குத் தனியானதொரு ஓய்வூதிய முறையை வழங்குவதே அரசாங்கத்தின் இலக்காகும்.

இலங்கையில் அரச ஊழியர்களுக்கு இணையான ஓய்வூதியப் பலன்கள் தனியார் துறையினருக்கும் கிடைக்கும் பட்சத்தில், அது ஊழியர்களின் பணிப் பாதுகாப்பை அதிகரிப்பதுடன், முதியோர் காலத்திற்கான சிறந்த நிதி ஆதாரமாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Exit mobile version