rtjy 199 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

தமிழர் தாயகத்தில் இன மோதல்களை ஏற்படுத்த அரசு திட்டம்

Share

தமிழர் தாயகத்தில் இன மோதல்களை ஏற்படுத்த அரசு திட்டம்

திருகோணமலை மாவட்டத்தில் சிங்கள – தமிழ் இன மோதலை உருவாக்க அரசு திட்டமிட்டுச் செயற்படுகின்றது எனச் சந்தேகம் எழுந்துள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (22.09.2023) நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம், தேசிய பாதுகாப்பு தொடர்பான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கிழக்கு மாகாண திருகோணமலை மாவட்டத்தில் மூவின மக்களும் வாழ்கின்றார்கள்.

இந்நிலையில், அண்மைக்காலமாக திருகோணமலை மாவட்டத்தில் சிங்கள – தமிழ் இனவாத முரண்பாடுகள் அதிகம் இடம்பெறுகின்றன.

இதன் ஒரு கட்டமாகவே கஜேந்திரன் எம்.பியும் திருகோணமலையில் வைத்து சிங்களவர்களால் தாக்கப்பட்டுள்ளார்.

எனவே, இனவாத மோதல்களுக்கு மூவின மக்களும் வாழும் திருகோணமலை மாவட்டம் பொருத்தமானதாக இருப்பதால் திருகோணமலை மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இனவாத முரண்பாடுகளைத் தோற்றுவிக்க அரசு முயற்சிக்கின்றதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...