6 2
இலங்கைசெய்திகள்

அரசாங்கத்திற்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும் – சஜித் பிரேமதாச

Share

அரசாங்கத்திற்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும் – சஜித் பிரேமதாச

விவசாயிகளையும், அரசு ஊழியர்களையும் ஏமாற்றிய தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசுக்கு எதிர்வரும் தேர்தலில் மக்கள் கடுமையான பாடம் புகட்ட வேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

“விவசாயிகளையும், அரசு ஊழியர்களையும் முன்னிறுத்தி ஆட்சியைப் பிடித்த தேசிய மக்கள் சக்தி (NPP) அரசு, இன்று அவர்களை முற்றிலும் மறந்து விட்டது,” என அவர் விமர்சனம் செய்துள்ளார்.

விவசாயிகளுக்கு உரச்சலுகை வழங்கப்படவில்லை, நெல் உற்பத்திக்கான போதிய உத்தரவாத விலையே கிடைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசு ஊழியர்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட சம்பள உயர்வும் கிடைக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹொரவ்பத்தான பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு தரமான விவசாய உபகரணங்கள் கிடைக்கவில்லை. கிடைக்கும் சில உரங்களின் தரம் மிகவும் மோசமாக இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், விவசாயிகளின் பயிர்சேதத்திற்கான இழப்பீட்டுகூட அரசு வழங்கவில்லை என்பதால், அவர்கள் பெரும் சவால்களை எதிர்கொள்கிறார்கள் என சஜித் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
articles2F6YDhCB6S7vQDq50VYCJH
இலங்கைசெய்திகள்

கடல்வளம் மற்றும் நீரியல் வளங்கள் பாதுகாப்புக்கு நவீன தொழில்நுட்பம்: அமைச்சர் சந்திரசேகர் உறுதி!

சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு இன்று கொழும்பு தாமரை கோபுரம் வளாகத்தில் ஆரம்பமான ‘அக்வா பிளான்ட்...

articles2F8wuyhpUNfptSJfoLRtVn
உலகம்செய்திகள்

அணுசக்தி பேச்சுவார்த்தையை மீளத் தொடங்க அமெரிக்காவை வற்புறுத்துமாறு சவுதியிடம் ஈரான் கோரிக்கை!

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியில் தடைபட்டிருந்த அணுசக்தி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க...

25 691962050dadd
செய்திகள்உலகம்

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகம்: MI5 எச்சரிக்கைக்கு மத்தியிலும் பிரதமர் ஒப்புதல்!

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகத்தை அமைக்கும் திட்டத்திற்கு, இங்கிலாந்துப் பிரதமர்...

image eb1947179c
அரசியல்இலங்கைசெய்திகள்

முதல் சந்தர்ப்பத்திலேயே அரசாங்கத்தைக் கவிழ்ப்போம்: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் – நாமல் ராஜபக்ஸ சவால்!

தற்போதைய அரசாங்கத்தை முதல் சந்தர்ப்பத்திலேயே கவிழ்ப்பதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...