3 11 scaled
இலங்கைசெய்திகள்

தொடர் தொழிற்சங்க போராட்டத்தில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

Share

தொடர் தொழிற்சங்க போராட்டத்தில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

வெளிநாடு செல்ல எதிர்பார்த்திருக்கும் வைத்திய அதிகாரிகளை தக்கவைத்துக் கொள்வதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை அறிவித்துள்ளது.

மூளை வடிகால் பற்றிய அழுத்தமான பிரச்சினைக்கு சுகாதார அமைச்சகம் பாராமுகம் காட்டுவதாக அந்த சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இந்த நிலையில், நவம்பர் 1ஆம் திகதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை, முக்கியஸ்தர்களின் சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான நடமாடும் நோயாளர் காவு வாகனச் சேவைகளில் இருந்து விலக தீர்மானித்துள்ளது.

மேலும்,மறு அறிவிப்பு வரும்வரை வைத்தியசாலை கடமைகளுக்கு வெளியே திட்டமிடப்பட்ட நடமாடும் வைத்திய முகாம் உட்பட அதனுடன் தொடர்புடைய பிற கடமை நடவடிக்கைகளில் இருந்து விலகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.

அத்துடன் நவம்பர் 1ஆம் திகதிக்கு பின்னர் மாகாண அளவிலான தொழிற்சங்க நடவடிக்கையைத் தொடங்கப் போவதாகவும் சங்கம் எச்சரித்துள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...