3 11 scaled
இலங்கைசெய்திகள்

தொடர் தொழிற்சங்க போராட்டத்தில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

Share

தொடர் தொழிற்சங்க போராட்டத்தில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

வெளிநாடு செல்ல எதிர்பார்த்திருக்கும் வைத்திய அதிகாரிகளை தக்கவைத்துக் கொள்வதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை அறிவித்துள்ளது.

மூளை வடிகால் பற்றிய அழுத்தமான பிரச்சினைக்கு சுகாதார அமைச்சகம் பாராமுகம் காட்டுவதாக அந்த சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இந்த நிலையில், நவம்பர் 1ஆம் திகதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை, முக்கியஸ்தர்களின் சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான நடமாடும் நோயாளர் காவு வாகனச் சேவைகளில் இருந்து விலக தீர்மானித்துள்ளது.

மேலும்,மறு அறிவிப்பு வரும்வரை வைத்தியசாலை கடமைகளுக்கு வெளியே திட்டமிடப்பட்ட நடமாடும் வைத்திய முகாம் உட்பட அதனுடன் தொடர்புடைய பிற கடமை நடவடிக்கைகளில் இருந்து விலகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.

அத்துடன் நவம்பர் 1ஆம் திகதிக்கு பின்னர் மாகாண அளவிலான தொழிற்சங்க நடவடிக்கையைத் தொடங்கப் போவதாகவும் சங்கம் எச்சரித்துள்ளது.

Share
தொடர்புடையது
25 6947c9eb14d31
உலகம்செய்திகள்

பங்களாதேஷில் தீப்பிடிக்கும் வன்முறை: அரசியல்வாதியின் வீட்டுக்குத் தீ வைப்பு; 7 வயது மகள் உடல் கருகி பலி!

பங்களாதேஷில் மாணவர் இயக்கத் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து வெடித்துள்ள கலவரம், தற்போது...

Namal Rajapaksa 1
செய்திகள்அரசியல்இலங்கை

நிவாரணம் 10% மக்களுக்கே சென்றடையும்; நடைமுறைச் சாத்தியமான திட்டங்கள் அவசியம்” – நாமல் ராஜபக்ச காட்டம்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசாங்கம் கடைப்பிடிக்கும் தற்போதைய நடைமுறைகள் போதுமானதாக இல்லை என...

பேராதனை
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேராதனை பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு: 29ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!

‘டித்வா’ சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பேராதனை பல்கலைக்கழகத்தின்...

25 69475175d454d
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையை மீட்டெடுக்க இந்தியாவின் ‘பேருதவித் திட்டம்’: நாளை கொழும்பு வருகிறார் ஜெய்சங்கர்!

புயல், வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீட்டெடுப்பதற்கான பாரிய உதவித்...