tamilnif 9 scaled
இலங்கைசெய்திகள்

வாகன இறக்குமதிக்கு அனுமதி: ஜனாதிபதி வர்த்தமானி

Share

இலங்கையில் சில புதிய வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் தற்போது நடைமுறையில் உள்ள வாகன இறக்குமதி தடைக்கு விதிவிலக்கு அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, சில புதிய வாகனங்களைக் இறக்குமதி செய்வதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படவுள்ள புதிய ரக வாகனங்கள் அரச நிறுவனங்களின் கள நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு, சுகாதார அமைச்சு ஆகியவற்றுக்கு முறையே புதிய எஸ்யூவி மற்றும் டபுள் கேப் பிக்கப் டிரக் ஆகிய வாகனங்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு மற்றும் கடற்படைக்கு இரண்டு புதிய பேருந்துகளும், தேசிய விமான நிறுவனமான சிறிலங்கன் ஏயர்லைன்ஸ் இற்கு மூன்று “அதி சொகுசு பேருந்துகளையும்” இறக்குமதி செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
1276730 0.jpeg
செய்திகள்உலகம்

ஈரான் சிறைப்பிடித்த எண்ணெய்க் கப்பல் ‘தலாரா’ விடுவிப்பு: 21 பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்!

ஹாா்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் கடந்த வாரம் சிறைப்பிடித்த, மாா்ஷல் தீவுகளின் கொடியேற்றப்பட்ட ‘தலாரா’ (Talara)...

pm modi 13 20251119144744
இந்தியாசெய்திகள்

ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்குப் பயணம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்கு விஜயம் செய்யத் தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன....

images 5 7
செய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: கால் தவறி கிணற்றில் வீழ்ந்த வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் நபரொருவர் கால் தவறி கிணற்றுக்குள் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்...

images 4 8
இலங்கைசெய்திகள்

அரச மருத்துவமனைகளில் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு: சிகிச்சை சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

அரச மருத்துவமனைகளில் சுமார் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...