tamilnif 9 scaled
இலங்கைசெய்திகள்

வாகன இறக்குமதிக்கு அனுமதி: ஜனாதிபதி வர்த்தமானி

Share

இலங்கையில் சில புதிய வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் தற்போது நடைமுறையில் உள்ள வாகன இறக்குமதி தடைக்கு விதிவிலக்கு அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, சில புதிய வாகனங்களைக் இறக்குமதி செய்வதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படவுள்ள புதிய ரக வாகனங்கள் அரச நிறுவனங்களின் கள நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு, சுகாதார அமைச்சு ஆகியவற்றுக்கு முறையே புதிய எஸ்யூவி மற்றும் டபுள் கேப் பிக்கப் டிரக் ஆகிய வாகனங்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு மற்றும் கடற்படைக்கு இரண்டு புதிய பேருந்துகளும், தேசிய விமான நிறுவனமான சிறிலங்கன் ஏயர்லைன்ஸ் இற்கு மூன்று “அதி சொகுசு பேருந்துகளையும்” இறக்குமதி செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 95099f5203
செய்திகள்இலங்கை

கொழும்பில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய வன்னி மாவட்ட எம்.பி. ரவிகரன்: வரவு செலவுத் திட்ட அமர்வுக்கு மத்தியில் உணர்வெழுச்சி!

தேச விடுதலைக்காகப் போராடி மடிந்த வீர மறவர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 21)...

images 1 11
செய்திகள்இலங்கை

அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தினோம்: சர்வதேச சக்திகளின் ஆதரவு இருந்தாலும் பணியவில்லை – முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

நாட்டில் இடம்பெற்ற அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்....

image e0f1498f29
செய்திகள்இலங்கை

தமிழ் தேசிய மாவீரர் வாரம் ஆரம்பம்: வேலணை சாட்டி துயிலும் இல்லத்தில் ஈகச் சுடரேற்றல் நிகழ்வு!

தேச விடுதலைக்காக போராடி மடிந்த வீர மறவர்களை நினைவுகூரும் தமிழ் தேசிய மாவீரர் வாரத்தின் ஆரம்ப...

Archchuna Ramanathan 1200px 24 11 22
செய்திகள்அரசியல்இலங்கை

பாராளுமன்ற உணவகத்தில் எம்.பி.க்கு கொலை மிரட்டல்: முஹம்மட் பைசல் மீது அர்ச்சுனா எம்.பி. குற்றச்சாட்டு!

தேசிய மக்கள் சக்தியின் (NPP) புத்தளம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால், இன்று (நவ 21)...