அரச ஊழியர்களை பெருமளவில் ஆட்சேர்ப்பு செய்யும் பரிந்துரைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அரச துறையில் ஆட்சேர்ப்பு செயன்முறை மற்றும் பணியாளர் மேலாண்மையை மறுஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகள் அறிக்கையாக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அமைச்சரவை அதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதன்படி, 15,073 வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு செயன்முறை ஆரம்பிக்கப்பட உள்ளது.