24 6656b3061a600 1
இலங்கைசெய்திகள்

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் புதிய தகவல்

Share

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் புதிய தகவல்

அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை 20000 ரூபாவினால் அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்தும் இன்று முதல் எதிர்ப்பு நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக அரச சேவை தொழிற் சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

முதற்கட்ட நடவடிக்கையாக அரச, அரை அரச, தோட்ட மற்றும் மாணவர் சமூகங்கள் ஒன்றிணைந்து கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ளதாக சங்கத்தின் இணை அமைப்பாளர் தம்மிக்க முனசிங்க தெரிவித்துள்ளார்.

இரண்டாவது நடவடிக்கையாக மாவட்ட மட்டத்தில் அரச நிறுவனங்களுக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் அதன் பின்னர் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரச துறையில் வெற்றிடமாக உள்ள பணியிடங்களை நிரப்பாததால் பல பிரச்சினைகள் எழுந்துள்ளதாகவும், எனவே வெற்றிடமாக உள்ள பணியிடங்களை விரைந்து நிரப்பவும், அரசு சொத்து விற்பனையை தடுக்கவும், கல்வி சீர்திருத்தம் என்ற போர்வையில் கல்வியை விற்கும் திட்டங்களை இரத்து செய்யக் கோரி இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரச சேவையில் உயர் பதவியில் இருப்பவர்களுக்கு அடிப்படை சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் 2016 ஆம் ஆண்டுக்கு பின்னர் கீழ்நிலை ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்காரணமாக அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை 20000 ரூபாவால் உயர்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கீழ்நிலையில் பணிபுரியும் அரச ஊழியர்களின் தற்போதைய சம்பளம் வாழ்வதற்கு போதவில்லை எனவும் சங்கத்தினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...

17 12
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு மோதலால் உலகளவில் உயரும் விமான எரிபொருள் விலை: விமானப் பயணச்சீட்டுகளின் விலையில் நேரடி தாக்கம்!

மத்திய கிழக்கில் தற்போது நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை...

16 12
உலகம்செய்திகள்

ஈராக்கில் ஆளில்லா வானூர்தி தாக்குதல்: பிரான்ஸ் இராணுவ அதிகாரி உயிரிழப்பு, ஜனாதிபதி மக்ரோன் கண்டனம்!

ஈராக்கின் எர்பில் (Erbil) பிராந்தியத்தில் அமைந்துள்ள கூட்டு இராணுவத் தளத்தின் மீது நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி...