24 664dfc33d28ff
இலங்கைசெய்திகள்

ஒரு தொகுதி அரசாங்க ஊழியர்களுக்கு அதிகரிக்கும் சம்பளம்

Share

ஒரு தொகுதி அரசாங்க ஊழியர்களுக்கு அதிகரிக்கும் சம்பளம்

இலங்கையில் 13,000க்கும் மேற்பட்ட கிராம உத்தியோகத்தர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதற்கமைய, இலங்கை கிராம சேவையாளர் சேவையை ஸ்தாபிப்பதற்காக, சேவைக்கான அரசியலமைப்பு வரைவு அரச சேவை ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சார்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த இன்று நாடாளுளுமன்றத்தில் பதில் அளிக்கும் போதே இதனை தெரிவித்தார்.

இது மிகப்பெரிய வெற்றி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய, கிராம அதிகாரிகளுக்கு GN என்ற புதிய சம்பளக் குறியீடு கிடைக்கும் என விளக்கமளித்துள்ளார்.

மேலும் புதிய கிராம அலுவலரின் அடிப்படை சம்பளம் 28,940 ரூபாய் முதல் 30,140 ரூபாயாக உயரும். கிராம எழுத்தர் சேவையில் தரம் 2 அதிகாரியின் அடிப்படை சம்பளம் 33,690 ரூபாயாகவும் தரம் 3 அதிகாரியின் அடிப்படை சம்பளம் 38,590 ரூபாயாகவும் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...