இலங்கைசெய்திகள்

ஒரு தொகுதி அரசாங்க ஊழியர்களுக்கு அதிகரிக்கும் சம்பளம்

24 664dfc33d28ff
Share

ஒரு தொகுதி அரசாங்க ஊழியர்களுக்கு அதிகரிக்கும் சம்பளம்

இலங்கையில் 13,000க்கும் மேற்பட்ட கிராம உத்தியோகத்தர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதற்கமைய, இலங்கை கிராம சேவையாளர் சேவையை ஸ்தாபிப்பதற்காக, சேவைக்கான அரசியலமைப்பு வரைவு அரச சேவை ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சார்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த இன்று நாடாளுளுமன்றத்தில் பதில் அளிக்கும் போதே இதனை தெரிவித்தார்.

இது மிகப்பெரிய வெற்றி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய, கிராம அதிகாரிகளுக்கு GN என்ற புதிய சம்பளக் குறியீடு கிடைக்கும் என விளக்கமளித்துள்ளார்.

மேலும் புதிய கிராம அலுவலரின் அடிப்படை சம்பளம் 28,940 ரூபாய் முதல் 30,140 ரூபாயாக உயரும். கிராம எழுத்தர் சேவையில் தரம் 2 அதிகாரியின் அடிப்படை சம்பளம் 33,690 ரூபாயாகவும் தரம் 3 அதிகாரியின் அடிப்படை சம்பளம் 38,590 ரூபாயாகவும் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share
Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...