16 6
இலங்கைசெய்திகள்

அரசு ஊழியர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

Share

இலங்கையில் அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கையில் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய 2025 ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும்போது இரண்டாவது காலாண்டில் நாட்டில் தனியார் துறை ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும், அரச ஊழியர்களின் எண்ணிக்கை சுமார் 200,000 குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல் காலாண்டில் நாட்டில் அரச ஊழியர்களின் எண்ணிக்கை 1,302,185 ஆகவும், இரண்டாவது காலாண்டில் 1,165,094 ஆகவும் குறைந்துள்ளதாக திணைக்களத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முதல் காலாண்டில் நாட்டில் தனியார் துறை ஊழியர்களின் எண்ணிக்கை 3,808,235 ஆகவும், இரண்டாவது காலாண்டில் 3,814,313 ஆகவும் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

மேலும், முதல் காலாண்டில் 8,461,936 ஆக இருந்த நாட்டில் பொருளாதார ரீதியாக இயங்கும் மக்கள் தொகை, இரண்டாவது காலாண்டில் 8,491,296 ஆக அதிகரித்துள்ளது.

ஆனால் நாட்டில் பொருளாதார ரீதியாக இயங்கும் மக்கள் தொகையை விட செயலற்ற மக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
1765079066 25 693273715360b md
இலங்கைசெய்திகள்

கண்டி – கொழும்பு ரயில் பயணிகளுக்கு நாளை முதல் சிறப்பு பேருந்துகள்!

கண்டி ரயில் நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கிப் புகையிரதத்தில் பயணிக்கும் பயணிகளுக்காக, நாளை (டிசம்பர் 8) காலை...

image 49051e3a6e 1
இலங்கைசெய்திகள்

நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி: “மகிழ்ச்சியாகத் தூங்கப் போனோம், மண்ணுக்குள் புதைந்தோம்” – தப்பியோர் அதிர்ச்சிப் பேட்டி!

மடுசீம பூட்டாவத்த பகுதியில் ஏற்பட்ட கோரமான நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்த...

images 19
இலங்கைசெய்திகள்

அனர்த்த உயிரிழப்புகள் 627 ஆக உயர்வு: கண்டி மாவட்டத்தில் அதிக பாதிப்பு! 

நாடு முழுவதும் சமீபத்திய நாட்களில் ஏற்பட்ட மிக மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 627...

image f1250cea24
அரசியல்இலங்கைசெய்திகள்

பூஸா சிறையில் அதிரடிச் சோதனை: 2 ஸ்மார்ட் போன்கள், 13 சிம் கார்டுகள் பறிமுதல்!

பூஸா உயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையின்போது 2 ஸ்மார்ட் தொலைபேசிகள், 13 சிம்...