tamilni 30 scaled
இலங்கைசெய்திகள்

அரச ஊழியர்களுக்கான 20 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு

Share

அரச ஊழியர்களுக்கான 20 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு

பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் அரசாங்க ஊழியர்களுக்கான சம்பளத்தை அரசாங்கம் அதிகரித்துள்ளது என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அரசாங்க ஊழியர்கள் கோரிய 20 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை வழங்க அரசாங்கத்திற்கும் விருப்பம் தான், ஆனால் அதனைக் கொடுத்தால் மக்களது வரிப் பணத்திலேயே அந்த நிதியை நாங்கள் மீண்டும் தேட வேண்டியிருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தெரணியகல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நிலையான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதுடன் மக்களுக்கு வழங்கக்கூடிய அனைத்து வசதிகளையும் வழங்குவதே அரசாங்கத்தின் வேலைத்திட்டம் ஆகும்.

பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் அரசாங்கம் அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்துள்ளது. இந்த நிலைமையை மக்களும் அரச ஊழியர்களும் புரிந்து கொண்டு கையாள வேண்டும்.

அரசாங்க ஊழியர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கு அரசாங்கம் மாதம் 7 பில்லியன் செலவழிக்க வேண்டியுள்ளது. 20 ஆயிரம் சம்பள அதிகரிப்பு கோரி 10 ஆயிரம் பேர் வீதிக்கு இறங்கி போராட தயாராகவிருந்தனர்.

அரச ஊழியர்களுக்கு 20 ஆயிரம் ரூபாவால் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கத்திற்கும் விருப்பம் தான். எனினும், அவ்வாறு கொடுத்தால் அந்த நிதியை மீண்டும் அரசாங்கம் மக்களின் வரிப்பணத்தின் ஊடாகவே தேட வேண்டியிருக்கும்.

எனவே, பொருளாதாரத்தை சீர்குழைக்கும் வகையிலான வேலைத்திட்டங்களை செய்ய அரசாங்கம் தயார் இல்லை. அத்துடன் கடன் பெற்று அதில் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவும் முடியாது.

இலங்கையில் திடமான ஒரு பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதே எமது நோக்கம். ஆனால், இவற்றுக்கெல்லாம் இடையில் பொதுமக்களுக்கு எம்மால் வழங்க முடியும் அனைத்து நிவாரணங்களையும் நாங்கள் வழங்குவோம். இது தேர்தலுக்காக நாங்கள் செய்யும் வேலைகள் அல்ல. எனவே இவற்றை அரச ஊழியர்களும் பொதுமக்களும் புரிந்து கொள்வாரக்ள் என்று நினைக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 47
செய்திகள்இந்தியா

டெல்லி AI உச்சி மாநாடு: கடைசி நேரத்தில் பின்வாங்கிய பில் கேட்ஸ்! – எப்ஸ்டீன் விவகார சர்ச்சை காரணமா?

டெல்லியில் நடைபெற்று வரும் ‘இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில்’ (India AI Impact...

image 1200x800 45
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் அதிரடி! – ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது; எப்ஸ்டீன் விவகாரத்தில் அரசு ரகசியங்களை கசியவிட்டாரா?

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் மற்றும் பொது அலுவலகத்தில் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக எழுந்த...

image 1200x800 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை மீண்டும்? – 310 மீட்டர் நீளத்தில் புதிய இறங்குதுறை அமைக்கத் திட்டம்!

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமன்னார் இறங்குதுறையை (Jetty) நவீனமயமாக்குவதற்கான முதற்கட்ட மேம்பாட்டுத் திட்டம்...