24 3
இலங்கைசெய்திகள்

அரச சேவையின் சம்பளம் மற்றும் கொடுப்பனவு தொடர்பில் ரணில் வெளியிட்ட தகவல்

Share

அரச சேவையின் சம்பளம் மற்றும் கொடுப்பனவு தொடர்பில் ரணில் வெளியிட்ட தகவல்

அரச சேவையின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கான நிபுணர் குழுவின் பரிந்துரைகள் நிதி அமைச்சின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் அனைத்து குடிமக்களின் வருமானத்தையும் அதிகரிக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு மானிய வட்டியில் வீட்டுக்கடன் வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்காலத்தில் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் அரசாங்க சொத்துக்களை உள்ளடக்கி புதிய முதலீட்டு நிறுவனம் உருவாக்கப்படவுள்ளதுடன் அதற்கான புதிய சட்டங்களும் கொண்டு வரப்படும் என அறிவித்துள்ளார்.

சொத்துக்களை உருவாக்கும் புதிய முதலீடுகளை குறிப்பிடுவதுடன் முறையான ஓய்வூதிய திட்டமிடல் முறையை நடைமுறைப்படுத்த முடியும் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...