14 4
இலங்கைசெய்திகள்

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பின் நிச்சயத்தன்மையை வெளியிட்ட எம்.பி

Share

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பின் நிச்சயத்தன்மையை வெளியிட்ட எம்.பி

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் மற்றுமொரு நடவடிக்கையாக நாட்டின் அபிவிருத்திக்கு உந்து சக்தியாக விளங்கும் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார் என்பதே உண்மையாகும் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பு பிளவர் வீதியிலுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் பிரசார அலுவலகத்தில் நேற்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,நாட்டில் 15 இலட்சம் அரச ஊழியர்களும் 5 இலட்சம் ஓய்வூதியதாரிகளும் 65 இலட்சம் சேமலாப நிதியை பெறுவோரும் உள்ளனர். இவர்களே நாட்டின் பொருளாதார வேகத்தை தீர்மானிப்பவர்களாக உள்ளனர். இம்முறை ஒரு கோடியே 70 இலட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யதார்த்தமான முறையில் சம்பளத்தை அதிகரித்துள்ளார். அதனுடன், மற்ற வேட்பாளர்களும் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கத் தொடங்கியுள்ளனர். ஆனால் அந்த வாக்குறுதிகளை அவர்களால் நிறைவேற்ற முடியுமா என்பது கேள்விக்குரியாகும்.

இதேவேளை வாக்குகளுக்காகவே அரச சேவையில் சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படுவதாக சில கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன.

ஆனால் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் மற்றுமொரு நடவடிக்கையாக நாட்டின் அபிவிருத்திக்கு உந்து சக்தியாக விளங்கும் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார் என்பதே உண்மையாகும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அதிகாரம் கிடைத்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் அரச துறையைப் பலப்படுத்தியுள்ளார்.

2024 ஜனாதிபதி தேர்தல் சாதி, மதம் சார்ந்த தலைவர் ஒருவரைத் தெரிவு செய்வதாக அன்றி உலகின் வலுவான தலைவர் ஒருவரை தெரிவு செய்வதற்கான தேர்தல் என்பதால் நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அரச ஊழியர்கள் வாக்களிக்க வேண்டும்.

உறுமய – அஸ்வெசும போன்ற திட்டங்கள் நாட்டின் பொருளாதார திட்டங்களுக்காகவே செயற்படுத்தப்படுவதாகவும், மாறாக அரசியல்வாதிகள் கூறவதைப் போன்று தேர்தல் நோக்கத்திற்காக செயற்படுத்தப்படும் திட்டங்கள் அல்லவெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
articles2F6YDhCB6S7vQDq50VYCJH
இலங்கைசெய்திகள்

கடல்வளம் மற்றும் நீரியல் வளங்கள் பாதுகாப்புக்கு நவீன தொழில்நுட்பம்: அமைச்சர் சந்திரசேகர் உறுதி!

சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு இன்று கொழும்பு தாமரை கோபுரம் வளாகத்தில் ஆரம்பமான ‘அக்வா பிளான்ட்...

articles2F8wuyhpUNfptSJfoLRtVn
உலகம்செய்திகள்

அணுசக்தி பேச்சுவார்த்தையை மீளத் தொடங்க அமெரிக்காவை வற்புறுத்துமாறு சவுதியிடம் ஈரான் கோரிக்கை!

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியில் தடைபட்டிருந்த அணுசக்தி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க...

25 691962050dadd
செய்திகள்உலகம்

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகம்: MI5 எச்சரிக்கைக்கு மத்தியிலும் பிரதமர் ஒப்புதல்!

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகத்தை அமைக்கும் திட்டத்திற்கு, இங்கிலாந்துப் பிரதமர்...

image eb1947179c
அரசியல்இலங்கைசெய்திகள்

முதல் சந்தர்ப்பத்திலேயே அரசாங்கத்தைக் கவிழ்ப்போம்: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் – நாமல் ராஜபக்ஸ சவால்!

தற்போதைய அரசாங்கத்தை முதல் சந்தர்ப்பத்திலேயே கவிழ்ப்பதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...