இலங்கைசெய்திகள்

ஓய்வு பெற்ற அரச ஊழியர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்! உயர்த்தப்படும் ஓய்வூதியத் தொகை

Share
24 1
Share

ஓய்வு பெற்ற அரச ஊழியர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்! உயர்த்தப்படும் ஓய்வூதியத் தொகை

ஓய்வுபெற்ற அரச ஊழியர்களின் ஓய்வூதிய ஏற்றத்தாழ்வுகளை நீக்கும் வகையில், அவர்களின் ஓய்வூதியத்தை குறைந்தபட்சம் 2500 ரூபாவால் உயர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அரச சேவையில் நிலவும் ஓய்வூதிய முரண்பாடுகளை நீக்கும் பொருட்டு, நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது.

இதற்கமைவாக, ஓய்வூதியத் தொகையை உயர்த்துவதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், 83,000 அரச ஓய்வூதியர்களுக்கு சலுகைகளை வழங்குவதற்கு இயலுமை கிட்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசால் அடிக்கடி மேற்கொள்ளப்பட்டுள்ள சம்பளத் திருத்தங்களாலும், அமைச்சரவையால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு கொள்கை ரீதியான தீர்மானங்களாலும், ஒருசில ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத் தொகையில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டுள்ளன.

இதன்படி, 2016.01.01 ஆம் திகதி தொடக்கம் 2020.01.01 வரைக்குமான ஓய்வூதியம் பெறுகின்ற அரச உத்தியோகத்தர்களுக்கு அநீதிகள் இடம்பெற்றுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளமைக்கு அமைவாக இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
2 11
இலங்கைசெய்திகள்

திருகோணமலையின் அனைத்து முடிவுகளிலும் தேசிய மக்கள் சக்தி முன்னிலை

திருகோணமலை மாவட்டத்துக்கான அனைத்து முடிவுகளும் தற்போது வெளியாகியுள்ளன. கட்சிகள் பெற்றுக்கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில் தேசிய மக்கள்...

2 12
இலங்கைசெய்திகள்

மட்டக்களப்பு மாநகரசபையில் இலங்கை தமிழரசுக் கட்சி அமோக வெற்றி

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் மட்டக்களப்பு – ஏறாவூர் பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன....

2 9
இலங்கைசெய்திகள்

மாத்தறை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி முன்னிலையில்..

கொடபொல பிரதேச சபை நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மாத்தறை – கொடபொல பிரதேச...

2 10
இலங்கைசெய்திகள்

புத்தளம் மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள்…

புத்தளம் – வென்னப்புவ பிரதேச சபை நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் புத்தளம் –...