இலங்கைசெய்திகள்

சந்தைக்கேற்ப அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு! மக்களுக்கு வழங்கப்படும் அறிவுரை

Share
13 3
Share

சந்தைக்கேற்ப அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு! மக்களுக்கு வழங்கப்படும் அறிவுரை

அரச ஊழியர்களுக்கு சந்தைக்கு ஏற்பட சம்பளம் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு வழங்கப்படும் போது மூளைசாலிகள் வெளியேற்றம் நடக்காது. அரச ஊழியர்கள் தொடர்ந்தும் சேவையில் ஈடுபடுவர் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன(Eran Wickramaratne) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

கடந்த தேர்தல்களில் கொலை குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களைக் கூட மக்கள் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்திருந்தனர். எனவே, இம்முறை அவ்வாறான தவறான தெரிவுகளுக்குச் செல்வதை மக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

இளைஞர், யுவதிகள் மாற்றம் வேண்டும் என சிந்திக்கின்றனர். அதற்கமைய பாரிய எதிர்பார்ப்புக்களுடனேயே அவர்கள் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்திருந்தனர். ஆனால் அந்த எதிர்பார்ப்புக்கள் தற்போது இழக்கப்பட்டுள்ளன.

எதிர்கால சந்ததியினரின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்பட வேண்டும். அதற்கு அனுபவமும் கல்வியறிவும் உள்ளவர்கள் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட வேண்டும்.

அரச ஊழியர்களுக்கு சந்தைக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு வழங்கப்படும்போது மூளைசாலிகள் வெளியேற்றம் நடக்காது. அரச ஊழியர்கள் தொடர்ந்தும் சேவையில் ஈடுபடுவர். இது குறித்து ஜனாதிபதியும் அரசாங்கமும் கவனம் செலுத்துவது சிறந்தாகும் என குறிப்பிட்டுள்ளார்.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...