17 7
இலங்கைசெய்திகள்

சம்பள அதிகரிப்பு உறுதி! அரச ஊழியர்களுக்கு ஜனாதிபதியின் செய்தி

Share

சம்பள அதிகரிப்பு உறுதி! அரச ஊழியர்களுக்கு ஜனாதிபதியின் செய்தி

அரச ஊழியர்களின் சம்பளம் நிச்சயமாக அதிகரிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayaka) தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்காப்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட அரசாங்கம் ஒன்றே எமக்குக் கிடைக்கப்பெற்றது.

நாம் கட்டுப்பட வேண்டிய பல விடயங்களை சர்வதேச நாணய நிதியம் எமக்கு வழங்கியுள்ளது. 2025ஆம் ஆண்டு எமது தேசிய வருமானம் மொத்த தேசிய உற்பத்தியில் 15வீதமாக அமைய வேண்டும் என்பது அதில் ஒன்றாகும்.

இவ்வாறு பல சிக்கல் நிலைகள் காணப்படுகின்றன. ஒன்று நாங்கள் அந்த நிகழ்ச்சித் திட்டத்தில் இருந்து வெளியில் வர வேண்டும். அல்லது அந்த ஒப்பந்தத்திற்குள் இருந்து கொண்டே சிறந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

எமது நாட்டின் தற்போதைய பொருளாதார இயலுமையை பொறுத்தமட்டில், நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தில் இருந்து வெளியில் வர முடியாது.

நிச்சயமாக உழைக்கும் போது செலுத்தவேண்டிய வரி தொடர்பான சிறந்த திட்டம் எம்மிடம் உள்ளது. வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அந்த நிவாரணம் மக்களுக்கு கிடைக்கும்.

அத்துடன், அரச ஊழியர்களின் சம்பளமும் நிச்சயமாக அதிகரிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
articles2Fka10y8tLGVxpVydY2Opn
செய்திகள்உலகம்

பிரித்தானிய நிதியமைச்சரின் வரவு செலவுத் திட்டம்: பங்குச் சந்தை முதலீட்டை ஊக்குவிக்கச் சேமிப்புக் கணக்கு வரம்பு குறைய வாய்ப்பு!

பிரித்தானிய நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் (Rachel Reeves) நாளைய தினம் (நவம்பர் 26) தனது வருடாந்தர...

articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...

25 6925a9a6dc131
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற பெண் ஊழியர் மீதான பாலியல் அத்துமீறல் புகார்: ஓய்வுபெற்ற நீதிபதியின் அறிக்கையில் முக்கிய முடிவு!

நாடாளுமன்ற பெண் ஊழியர் ஒருவர் மீது பாலியல் அத்துமீறல் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து அறிக்கை...