இலங்கைசெய்திகள்

அரச ஊழியர்களுக்கான விசேட மாதாந்த கொடுப்பனவு தொடர்பில் வெளியான சுற்றறிக்கை

Share

அரச ஊழியர்களுக்கான விசேட மாதாந்த கொடுப்பனவு தொடர்பில் வெளியான சுற்றறிக்கை

அரச சேவையின் நிர்வாக சேவை பிரிவு அதிகாரிகளுக்கு இன்று (01) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 25,000 ரூபா விசேட மாதாந்த கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதுவரை கால சேவையின் அடிப்படையில் வழங்கப்பட்ட விசேட கொடுப்பனவுக்குப் பதிலாக, சேவையின் கால அளவைப் பொருட்படுத்தாமல் 25,000 ரூபா விசேட மாதாந்த கொடுப்பனவாக வழங்குவதற்கு கடந்த (24 ஆம் திகதி) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த கொடுப்பனவு  இலங்கை பொறியியல் சேவை,  இலங்கை கட்டிடக்கலை சேவை மற்றும் இலங்கை நில அளவையாளர் சேவை அதிகாரிகளுக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான சுற்றறிக்கை பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்னவின் கையொப்பத்துடன் அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கை திறைசேரியின் ஒப்புதலுடன் வெளியிடப்பட்டுள்ளதுடன், இந்த சுற்றறிக்கையின் விதிகள் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
10 13
செய்திகள்உலகம்

டிஜிட்டல் களத்தில் தீவிரமடையும் அமெரிக்கா – ஈரான் போர்: அனிமேஷன் காணொளிகளால் புதிய பரிமாணம்!

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்களால் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி...

09 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை – ஈரான் வெளிவிவகார அமைச்சர்கள் தொலைபேசி உரையாடல்: ஈரானின் பாராட்டு!

ஈரான் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்கப் படைகளுக்கு இடையே பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்கள் குறித்து, இலங்கையின் வெளிவிவகார...

08 13
செய்திகள்உலகம்

லெபனான் – இஸ்ரேல் போர் பதற்றம்: பாரிஸில் அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தயார்

லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் தீவிர மோதல்களைக் கட்டுப்படுத்துவதற்கும்,...

07 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வீட்டுப் பணி உதவியாளர்களை வேலைக்கு அமர்த்தும்போது அவதானம்: காவல்துறை விசேட அறிவுறுத்தல்!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் அண்மைக்காலமாகப் பதிவாகி வரும் வீடுகளில் இடம்பெறும் திருட்டுச் சம்பவங்களைக் கருத்திற்கொண்டு, வீட்டுப்...