11
இலங்கைசெய்திகள்

அரசாங்கத்தின் மூன்று அமைச்சர்கள் தொடர்பில் ரணில் வெளியிட்ட தகவல்

Share

அரசாங்கத்தின் மூன்று அமைச்சர்கள் தொடர்பில் ரணில் வெளியிட்ட தகவல்

நிதித்திரவத்தன்மை பற்றி அரசாங்கத்திற்கு தெரியவில்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பணம் அச்சிடுதல் மற்றும் நிதி திரவத்தன்மை பற்றி அரசாங்கத்திற்கு போதியளவு தெளிவு கிடையாது எனவும், போதியளவு தெளிவற்ற அரசாங்கம் ஊடகங்கள் மீதோ அல்லது வேறும் தரப்பினர் மீதோ குற்றம் சுமத்துவதில் நியாயமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கண்டியில் நடைபெற்ற கூட்டமொன்றில் ரணில் விக்ரமசிங்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட பரத்தலமுல்ல சீலரதன தேரருக்குக் கூட நிதி திரவத்தன்மை பற்றிய தெளிவு உண்டு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் மூன்று அமைச்சர்களுக்கும் போதியளவு தெளிவு கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்க ஊழியர்களின் சம்பளங்கள் தொடர்பில் உதய ஆர் செனவிரட்ன அறிக்கை தொடர்பில் போலி தகவல் வெளியிட்டமைக்காக பிரதமர் ஹரினி அமரசூரிய பதவி விலக வேண்டுமென கோரியுள்ளார்.

ஆளும் கட்சியின் அமைச்சர்கள் எவ்வளவு கூச்சலிட்டாலும் அரசியல் சாசனம் பற்றி அவர்களுக்கு போதியளவு தெளிவு கிடையாது என ரணில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...