11
இலங்கைசெய்திகள்

அரசாங்கத்தின் மூன்று அமைச்சர்கள் தொடர்பில் ரணில் வெளியிட்ட தகவல்

Share

அரசாங்கத்தின் மூன்று அமைச்சர்கள் தொடர்பில் ரணில் வெளியிட்ட தகவல்

நிதித்திரவத்தன்மை பற்றி அரசாங்கத்திற்கு தெரியவில்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பணம் அச்சிடுதல் மற்றும் நிதி திரவத்தன்மை பற்றி அரசாங்கத்திற்கு போதியளவு தெளிவு கிடையாது எனவும், போதியளவு தெளிவற்ற அரசாங்கம் ஊடகங்கள் மீதோ அல்லது வேறும் தரப்பினர் மீதோ குற்றம் சுமத்துவதில் நியாயமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கண்டியில் நடைபெற்ற கூட்டமொன்றில் ரணில் விக்ரமசிங்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட பரத்தலமுல்ல சீலரதன தேரருக்குக் கூட நிதி திரவத்தன்மை பற்றிய தெளிவு உண்டு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் மூன்று அமைச்சர்களுக்கும் போதியளவு தெளிவு கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்க ஊழியர்களின் சம்பளங்கள் தொடர்பில் உதய ஆர் செனவிரட்ன அறிக்கை தொடர்பில் போலி தகவல் வெளியிட்டமைக்காக பிரதமர் ஹரினி அமரசூரிய பதவி விலக வேண்டுமென கோரியுள்ளார்.

ஆளும் கட்சியின் அமைச்சர்கள் எவ்வளவு கூச்சலிட்டாலும் அரசியல் சாசனம் பற்றி அவர்களுக்கு போதியளவு தெளிவு கிடையாது என ரணில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
25 69149dba7d420
உலகம்செய்திகள்

முதுகலை, முனைவர் பட்ட மாணவர்களுக்கான கல்வி அனுமதி நடைமுறை இலகுபடுத்தப்பட்டது – மாகாண சான்றளிப்பு இனித் தேவையில்லை!

எதிர்வரும் 2026ஆம் ஆண்டு முதல் சர்வதேச மாணவர்கள் கல்வி அனுமதிகளைப் பெறும் முறையை கனடா இலகுவாக்க...

MediaFile 2 2
செய்திகள்இலங்கை

கெஹல்பத்தர பத்மே வாக்குமூலத்தின் அடிப்படையில்: முன்னணி நடிகை ஒருவர் விரைவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்படலாம்!

கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர் கெஹல்பத்தர பத்மே வழங்கிய வாக்குமூலத்தின்...

25 69148ab688d8c
செய்திகள்உலகம்

அமெரிக்காவிற்குத் திறமையான தொழிலாளர்கள் தேவை: H-1B விசா கட்டண உயர்வுக்குப் பின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

தனது நாட்டிற்கு வெளிநாடுகளில் இருக்கும் திறமையான தொழிலாளர்கள் மற்றும் சிறப்புத் திறன்களைக் கொண்டவர்கள் தேவை என...

1747801591 RAMITH 6
இலங்கைசெய்திகள்

நாகரிகமற்ற செயல்: ரூ. 296 மில்லியன் சொத்துக் குவிப்பு வழக்கில் பிணையில் வந்த கெஹெலியவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனும், முன்னாள் தனிப்பட்ட செயலாளருமான ரமித் ரம்புக்வெல்ல, நீதிமன்றத்திற்கு வெளியே...