16 2
இலங்கைசெய்திகள்

மதத்தலங்கள் தொடர்பில் வெளியான தகவலை மறுக்கும் அரசாங்கம்

Share

மதத்தலங்கள் தொடர்பில் வெளியான தகவலை மறுக்கும் அரசாங்கம்

நாடு முழுவதும் உள்ள கோயில்கள் மற்றும் பிற மதத் தலங்களின் பாதுகாப்பு தொடர்பில் வெளியான தகவல்களை அரசாங்கம் மறுத்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்படி, குறித்த மதத்தலங்களின் பாதுகாப்புக்காக அமர்த்தப்பட்ட இராணுவ வீரர்களை திரும்பப் பெற அரசு முடிவு செய்துள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகள் தவறானவை என்று அரசாங்கம் கூறியுள்ளது.

பாதுகாப்பு அமைச்சகத்தினால் அத்தகைய முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்பதை அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.

அத்துடன் இந்த கூற்றுக்கள் முற்றிலும் ஆதாரமற்றவை என்றும் அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

முன்னதாக, முன்னாள் ஜனாதிபதிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக கூறப்பட்ட செய்திகளையும் அரசாங்கம் மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 27
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சன்ரைசர்ஸை வீழ்த்தி நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி அபார வெற்றி!

ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி,...

Untitled 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி முடிவு நாளை!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தனது...

Untitled 25
உலகம்செய்திகள்

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏஐ இரகசியங்கள் கசிவு: சைபர் பாதுகாப்பு நிறுவனங்களுக்குப் பெரும் சவால்!

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), உருவாக்கி வரும் தனது அடுத்த...

01 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு அவசர சிகிச்சை: மனிதாபிமான அடிப்படையில் உதவிய இலங்கை கடற்படை!

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ (Shi...