9 35
இலங்கைசெய்திகள்

புதிய எம்.பிக்களுக்கான வாகனங்கள் தொடர்பில் அரசின் அறிவிப்பு

Share

புதிய எம்.பிக்களுக்கான வாகனங்கள் தொடர்பில் அரசின் அறிவிப்பு

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகனங்களை ஒதுக்குவதற்கு அரசாங்கம் கொள்கை தீர்மானம் எடுத்திருந்த போதிலும் இதுவரை வாகனங்களை ஒதுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, அரசாங்கம் தற்போது சொகுசு வாகனங்களை ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நேற்று (25) தென்னிலங்கை ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தற்போது பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது சொந்த வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

புதிய நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களுக்கு வாகனங்களை வழங்குவதற்கு நாங்கள் தீர்மானம் எடுத்துள்ளோம்.

எனினும், அவர்களுக்கு வாகனங்களை எப்போது ஒதுக்குவது என்பது குறித்து நாங்கள் முடிவு செய்யவில்லை.

அவர்களுக்கு ஒதுக்கப்படவுள்ள வாகனங்களையும் இறக்குமதி செய்ய மாட்டோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சலுகைகளை குறைக்க புதிய அரசு முடிவு செய்துள்ள நிலையில் வரியின்றி வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 19 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வங்கக்கடலில் குறைந்த அழுத்தப் பிரதேசம் நீடிப்பு: மீனவர்களுக்கு ஆம்பர் எச்சரிக்கை! – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கைக்குத் தென்கிழக்காக, தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம் (Low Pressure...

image 1200x800 18 2
விளையாட்டுசெய்திகள்

இலங்கை அணிக்கு பேரிடி! – மதீஷ பத்திரண உலகக்கோப்பையிலிருந்து விலகல்; மதுசங்கவுக்கு ஐசிசி அனுமதி!

ஐசிசி டி20 உலகக்கோப்பை 2026 தொடரில் விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து...

image 1200x800 17 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அக்குரேகொட இரட்டைக் கொலை: கைதான சகோதரர்களுக்கு மார்ச் 4 வரை விளக்கமறியல்! – டுபாயிலிருந்து இயங்கிய மாபியா அம்பலம்!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரையும் அவரது மனைவியையும் சுட்டுக்கொலை செய்த சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை வழங்கிய...

image 1200x800 20 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹம்பாந்தோட்டையில் இரு பேருந்துகள் பயங்கர மோதல்! – வெளிநாட்டினர் உட்பட 20 பேர் காயம்; கடைகள் சேதம்!

ஹம்பாந்தோட்டை பல்லேமளல பகுதியில் இன்று (18) நண்பகல் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தும், தனியார் பேருந்தும்...