24 665fe179b8dee
இலங்கைசெய்திகள்

காணாமல் போன அரசுக்கு சொந்தமான வாகனங்கள் : விசாரணை

Share

காணாமல் போன அரசுக்கு சொந்தமான வாகனங்கள் : விசாரணை

காணாமல் போன அரசுக்கு சொந்தமான வாகனங்களை அடையாளம் காண்பதற்காக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிசாந்த வீரசிங்க (Nishantha Weerasinghe) குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில வருடங்களில் சில பொது நிறுவனங்களில் இருந்து காணாமல் போனதாகக் கூறப்படும் மற்றும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள 5,000 இற்கும் மேற்பட்ட அரசுக்கு சொந்தமான வாகனங்களை கண்டுபிடிப்பதன் அவசியத்தை தேசிய கணக்காய்வு அலுவலகம் அண்மையில் வலியுறுத்தியுள்ளது.

தொலைந்து போன வாகனங்களின் இருப்பிடங்கள் மற்றும் அவற்றின் தவறான இடம் தொடர்பான ஏதேனும் முறைகேடுகள் குறித்து முழுமையான விசாரணையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்று கணக்காய்வு அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில், காணாமல் போன வாகனங்களை அடையாளம் காண திணைக்களம் விரிவான விசாரணையை ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக வீரசிங்க தெரிவித்துள்ளார்.

அதிபர் செயலகத்திற்கு சொந்தமான பல வாகனங்களும் காணாமல் போன வாகனங்களாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் மற்றும் இது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு விரைவில் அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கணக்காய்வாளர் நாயகத்தின் ஆய்வு அறிக்கையின் படி சுகாதார அமைச்சுக்கு சொந்தமான 679 கார்கள் மற்றும் 1,115 மோட்டார் சைக்கிள்கள் உட்பட 1,794 வாகனங்கள் காணாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...

18 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் புத்தாண்டுக்கு முன் வெளியீடு: பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தகவல்!

2025-ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள், எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ்...