24 665fe179b8dee
இலங்கைசெய்திகள்

காணாமல் போன அரசுக்கு சொந்தமான வாகனங்கள் : விசாரணை

Share

காணாமல் போன அரசுக்கு சொந்தமான வாகனங்கள் : விசாரணை

காணாமல் போன அரசுக்கு சொந்தமான வாகனங்களை அடையாளம் காண்பதற்காக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிசாந்த வீரசிங்க (Nishantha Weerasinghe) குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில வருடங்களில் சில பொது நிறுவனங்களில் இருந்து காணாமல் போனதாகக் கூறப்படும் மற்றும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள 5,000 இற்கும் மேற்பட்ட அரசுக்கு சொந்தமான வாகனங்களை கண்டுபிடிப்பதன் அவசியத்தை தேசிய கணக்காய்வு அலுவலகம் அண்மையில் வலியுறுத்தியுள்ளது.

தொலைந்து போன வாகனங்களின் இருப்பிடங்கள் மற்றும் அவற்றின் தவறான இடம் தொடர்பான ஏதேனும் முறைகேடுகள் குறித்து முழுமையான விசாரணையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்று கணக்காய்வு அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில், காணாமல் போன வாகனங்களை அடையாளம் காண திணைக்களம் விரிவான விசாரணையை ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக வீரசிங்க தெரிவித்துள்ளார்.

அதிபர் செயலகத்திற்கு சொந்தமான பல வாகனங்களும் காணாமல் போன வாகனங்களாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் மற்றும் இது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு விரைவில் அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கணக்காய்வாளர் நாயகத்தின் ஆய்வு அறிக்கையின் படி சுகாதார அமைச்சுக்கு சொந்தமான 679 கார்கள் மற்றும் 1,115 மோட்டார் சைக்கிள்கள் உட்பட 1,794 வாகனங்கள் காணாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரச சுபநேரக் குழுவின்மையால் சர்ச்சை: ‘சர்வஜன அதிகாரம்’ வெளியிட்ட புத்தாண்டு சுபநேரப் பத்திரம்!

2024 ஆம் ஆண்டில் கலாசார திணைக்களத்தால் அரச சுபநேரக் குழு கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசாங்கம் இதுவரையில்...

24 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் சுகாதார சேவையை வலுப்படுத்த புதிய முயற்சி: 2,918 செவிலியர் மாணவர்கள் இணைப்பு!

இலங்கையின் சுகாதாரத் துறையை மேம்படுத்தும் நோக்கில், புதிய மாணவ செவிலியர் பயிற்சிக்காக 2,918 பேரை இணைத்துக்கொள்ளும்...

23 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கில் அமைதியை வலியுறுத்தும் ஹமாஸ்: ஈரானிடம் விடுத்த கோரிக்கை!

மத்திய கிழக்கில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் தீவிரமடைந்து வரும்...

22 11
செய்திகள்உலகம்

புதிய தலைவர் மொஜ்தபா காமெனிக்கு அச்சுறுத்தல் விடுத்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் – ஈரான் எச்சரிக்கை!

ஈரானின் புதிய உயர்மட்டத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா காமெனியை (Mojtaba Khamenei) இலக்கு வைத்து அமெரிக்காவோ...