2 26
இலங்கைசெய்திகள்

தொழிலதிபர்களுக்கு பிணையமில்லாத கடன் : அரசு வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்

Share

தொழிலதிபர்களுக்கு பிணையமில்லாத கடன் : அரசு வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்

இந்த ஆண்டு வரவு செலவு திட்டத்தில் தொழிலதிபர்களுக்கு பிணையமில்லாத கடன்களைப் பெறுவதற்கான ஒரு முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தகைய கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கு சலுகைக் காலத்தை வழங்குவதற்கான திட்டமும் வரவு செலவு திட்டத்தில் சேர்க்கப்படவுள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும (Harshana Suriyapperuma) தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டின் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம், நாட்டுக்குத் தேவையான அந்நியச் செலாவணியை ஈட்டவும், தற்போதுள்ள கடனில் ஒரு பகுதியையாவது அடைக்கவும் மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்த நோக்கத்தை நிறைவேற்றுவது அரசாங்கத்தின் பொறுப்பு எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்றுமதி மேம்பாட்டு வாரியத்தின் பங்கேற்றதுடன், தொழில்துறையினருக்கு வழங்கக்கூடிய சலுகைத் திட்டங்கள் குறித்து அவர்களுக்குத் தெரிவிப்பது அவசியம் என்று பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...