கோட்டாபயவின் திரிபோலி கொலை குழுவால் நாங்களும் கொல்லப்படுவோமா.. சாணக்கியன்
கோட்டாபய ராஜபக்சவுடன் இணைந்து இயங்கிய திரிபோலி ப்ரோட்டன் குழுவை பாவித்து எங்களையும் கொலை செய்வார்களா என்ற பயம் உருவாகியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
மட்டக்களப் மாவட்டத்தில் மக்களுக்காகவும், உரிமைக்காகவும் பல உண்மைகளை வெளிக்கொண்டுவரும் ஊடகவியலாளர்களான சசி புண்ணியமூர்த்தி, நிலாந்தன், கிருஷ்ணா போன்றவர்கள் கடும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் தங்களது ஊடக கடமையை செய்து வருகின்றனர்.
இன்றும் அந்த ஊடகவியலாளர்கள் இந்தப் பிள்ளையான் போன்றவர்களால் அச்சுறுத்தப்பட்டு வருவதுடன் அவர்களுடைய உயிர்களுக்கு ஆபத்தும், உத்தரவாதம் இல்லாத நிலையும் காணப்படுகின்றது.
ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இந்த நிலை என்றால் எங்களுக்கும் பயமாக இருக்கின்றது. காரணம் நானும் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். கோட்டாபய ராஜபக்சவுடன் சேர்ந்து இயங்கிய திரிபோலி ப்ரோட்டன் குழுவை பாவித்து எங்களையும் கொலை செய்வார்களா என்ற அச்சம் எமக்கு உண்டு என குறிப்பிட்டார்.