24 66442878e3954
இலங்கைசெய்திகள்

கோட்டாபயவை ஆட்சியிலிருந்து வெளியேற்ற செயற்பட்ட மகிந்த குடும்பம்

Share

கோட்டாபயவை ஆட்சியிலிருந்து வெளியேற்ற செயற்பட்ட மகிந்த குடும்பம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற்றுவதற்காக, முன்னாள் அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் செயற்பட்டதாக தொழிலதிபர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, அவர்கள் இருவரும் நாட்டில் எரிபொருள் மற்றும் எரிவாயு வரிசைகளை உருவாக்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றிரவு இடம்பெற்ற அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது திலித் ஜயவீர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி நீக்கம் செய்வதற்கான சதித்திட்டத்தை பசில் ராஜபக்ஷவும் நாமல் ராஜபக்ஷவும் முன்னெடுத்ததாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அப்போதைய அரசாங்கத்தில் பசில் ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோரின் கீழ் பல பொறுப்பு வாய்ந்த அமைச்சுக்கள் இருந்ததாக திலித் ஜயவீர குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் உள்ள வரிசைகளுக்கு அந்த அமைச்சுகளே பொறுப்பு எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...