24 66442878e3954
இலங்கைசெய்திகள்

கோட்டாபயவை ஆட்சியிலிருந்து வெளியேற்ற செயற்பட்ட மகிந்த குடும்பம்

Share

கோட்டாபயவை ஆட்சியிலிருந்து வெளியேற்ற செயற்பட்ட மகிந்த குடும்பம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற்றுவதற்காக, முன்னாள் அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் செயற்பட்டதாக தொழிலதிபர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, அவர்கள் இருவரும் நாட்டில் எரிபொருள் மற்றும் எரிவாயு வரிசைகளை உருவாக்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றிரவு இடம்பெற்ற அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது திலித் ஜயவீர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி நீக்கம் செய்வதற்கான சதித்திட்டத்தை பசில் ராஜபக்ஷவும் நாமல் ராஜபக்ஷவும் முன்னெடுத்ததாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அப்போதைய அரசாங்கத்தில் பசில் ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோரின் கீழ் பல பொறுப்பு வாய்ந்த அமைச்சுக்கள் இருந்ததாக திலித் ஜயவீர குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் உள்ள வரிசைகளுக்கு அந்த அமைச்சுகளே பொறுப்பு எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Ranil UNP
செய்திகள்அரசியல்இலங்கை

சிறிகொத்தவில் டிஜிட்டல் புரட்சி: ஸ்டார்லிங்க் வசதி மற்றும் UNP செயலியுடன் களமிறங்கும் ஐக்கிய தேசியக் கட்சி!

ஐக்கிய தேசியக் கட்சி (UNP) தனது அரசியல் கட்டமைப்பை நவீன தொழில்நுட்பத்துடன் இணைக்கும் நோக்கில், ஒரு...

Weather Forecast Oct 11 2025
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாட்டின் பல பகுதிகளில் மழை: சில இடங்களில் 50 மி.மீ வரை பலத்த மழை பெய்யக்கூடும்!

நாட்டின் பல மாகாணங்களில் இன்றும் மழை பெய்யக்கூடிய வானிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் முன்னறிவிப்பு விடுத்துள்ளது....

NAMAL
செய்திகள்அரசியல்இலங்கை

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் நாமல் ராஜபக்ச: வாக்குமூலம் அளிக்க நேரில் முன்னிலை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச சற்று முன்னர்...

PSX 20260202 191816
செய்திகள்அரசியல்இலங்கை

எனக்கும் கெஹெல்பத்தர பத்மேவுக்கும் தொடர்பில்லை! – CID விசாரணையில் பிரசன்ன ரணதுங்க விளக்கம்.

திட்டமிட்ட குற்றச்செயல்களை வழிநடத்தியதாகக் கருதப்படும் ‘கெஹெல்பத்தர பத்மே’ தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க...