இலங்கைசெய்திகள்

கமல் குணரத்னவை துரோகியாக்கிய கோட்டாபயவின் புத்தகம்

18 2 scaled
Share

கமல் குணரத்னவை துரோகியாக்கிய கோட்டாபயவின் புத்தகம்

அமைதியான மக்கள் போராட்டத்தினால் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பெயரில் வெளியிடப்பட்டுள்ள சதி என்ற ஆவண புத்தகத்தில் மற்றுமொரு சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன துரோகி என மறைமுகமாக குறிப்பிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சதி என்ற பெயரில் வெளியாகியுள்ள அந்த புத்தகத்தில் 2022 ஆம் ஆண்டு மே மாதம் 09ஆம் திகதி அனைத்து பாதுகாப்புப் படைத் தலைவர்களும் துரோகிகள் என்பதன் அடைப்படையில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

எனினும் உளவுத்துறைத் தலைவர் சுரேஷ் சாலே துரோகி பெயரில் இருந்து விடுவிக்கப்பட்டிருப்பது சிறப்பம்சமாகும். ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்கவின் கீழ் அதே பதவியில் அவர் இன்றும் பணியாற்றி வருகிறார்.

“பாதுகாப்புச் செயலாளர், பாதுகாப்புப் படைகளின் பிரதானி மற்றும் முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் இத்தகைய சூழ்நிலைகளுக்கு சரியான பதிலடி கொடுப்பதற்கான திட்டத்தை தயாரித்திருக்க வேண்டும். ஆனால் அத்தகைய சூழ்நிலையை கட்டுப்படுத்த எந்த முறையும் பயன்படுத்தப்படவில்லை” என அந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் மா அதிபர் கூட இவ்வாறு குற்றம் சாட்டப்பட்டுள்ள போதிலும் பதில் திட்டத்தை தயாரிப்பதில் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலேவின் பங்கு இவ்வாறு தவிர்க்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...