இலங்கைசெய்திகள்

கமல் குணரத்னவை துரோகியாக்கிய கோட்டாபயவின் புத்தகம்

Share
18 2 scaled
Share

கமல் குணரத்னவை துரோகியாக்கிய கோட்டாபயவின் புத்தகம்

அமைதியான மக்கள் போராட்டத்தினால் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பெயரில் வெளியிடப்பட்டுள்ள சதி என்ற ஆவண புத்தகத்தில் மற்றுமொரு சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன துரோகி என மறைமுகமாக குறிப்பிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சதி என்ற பெயரில் வெளியாகியுள்ள அந்த புத்தகத்தில் 2022 ஆம் ஆண்டு மே மாதம் 09ஆம் திகதி அனைத்து பாதுகாப்புப் படைத் தலைவர்களும் துரோகிகள் என்பதன் அடைப்படையில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

எனினும் உளவுத்துறைத் தலைவர் சுரேஷ் சாலே துரோகி பெயரில் இருந்து விடுவிக்கப்பட்டிருப்பது சிறப்பம்சமாகும். ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்கவின் கீழ் அதே பதவியில் அவர் இன்றும் பணியாற்றி வருகிறார்.

“பாதுகாப்புச் செயலாளர், பாதுகாப்புப் படைகளின் பிரதானி மற்றும் முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் இத்தகைய சூழ்நிலைகளுக்கு சரியான பதிலடி கொடுப்பதற்கான திட்டத்தை தயாரித்திருக்க வேண்டும். ஆனால் அத்தகைய சூழ்நிலையை கட்டுப்படுத்த எந்த முறையும் பயன்படுத்தப்படவில்லை” என அந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் மா அதிபர் கூட இவ்வாறு குற்றம் சாட்டப்பட்டுள்ள போதிலும் பதில் திட்டத்தை தயாரிப்பதில் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலேவின் பங்கு இவ்வாறு தவிர்க்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...