இலங்கை

கட்டுநாயக்கவில் அதிரடியாக கைதான மூவர்: பின்னணியில் இருந்த காரணம்

Share
12 19
Share

கட்டுநாயக்கவில் அதிரடியாக கைதான மூவர்: பின்னணியில் இருந்த காரணம்

ஐந்து கோடி ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் இலத்திரனியல் தொடர்பாடல் சாதனங்களை இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் கொண்டு வந்த மூன்று பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது, இன்று கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவர்களில் முதல் இரண்டு பயணிகளும் அதிகாலை 12.30 மணியளவில் டுபாயிலிருந்து FZ-569 விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இந்த சந்தேகநபர்கள் கொழும்பு பிரதேசத்தில் வசிக்கும் 38 மற்றும் 25 வயதுடைய வர்த்தகர்கள் இருவர் என தெரியவந்துள்ளது.

மேலும், கொழும்பில் வசிக்கும் 32 வயதுடைய மற்றுமொரு வர்த்தகர் துபாயிலிருந்து 12/20 காலை 09.45 மணியளவில் சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-226 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதன்போது, 309 கையடக்கத் தொலைபேசிகள், 08 டெப்கள், கையடக்கத் தொலைபேசி பாகங்கள், 12 மடிக்கணினிகள், 02 மேக் புத்தகங்கள், 04 ஐபேட்கள், 20 ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள், 05 ரவுட்டர்கள், 30 இயர் பட்கள் என்பன சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மூவரையும் கைது செய்துள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
Related Articles
25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...

14 6
இலங்கைசெய்திகள்

தபால் வாக்குகள் தனியாக எண்ணப்பட மாட்டாது:வெளியான அறிவிப்பு

இன்று நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலின் போது தபால் வாக்குகள் தனியாக எண்ணப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது....

13 6
இலங்கைசெய்திகள்

வவுனியாவில் 80 இலட்சம் பெறுமதியான நகைகள் மீட்பு

வவுனியாவில் 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான 35 பவுன் தங்க நகைகளினை மீட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிஸார்...

15 6
இலங்கைசெய்திகள்

வெலிக்கடை சிறைக்குள் இருந்து கைத்துப்பாக்கி மீட்பு

வெலிக்கடைச் சிறைச்சாலையின் கழிவுநீர் வடிகாண் ஒன்றின் அருகே இருந்து கைத்துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளது. வெலிக்கடைச் சிறைச்சாலையின் எல்...