9 37
இலங்கைசெய்திகள்

வங்கி கடன்கள் பெற்றுள்ளவர்களுக்கு வெளியான நற்செய்தி

Share

வங்கி கடன்கள் பெற்றுள்ளவர்களுக்கு வெளியான நற்செய்தி

25 மில்லியன் ரூபாவிற்கும் குறைவான கடனைப் பெறுபவர்களில் 99% பேர் வங்கிகளுடன் தங்கள் கடனைப் பற்றி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி பணம் செலுத்தும் திட்டத்தைமொன்றை மேற்கொள்வதற்கு 12 மாத கால அவகாசத்தை அரசாங்கம் வழங்கியுள்ளது.

மத்திய வங்கியின் தரவுகளின்படி, 25 முதல் 50 மில்லியன் ரூபா வரையிலான கடனாளிகளுக்கு 9 மாத கால நீடிப்பும், ஏனைய கடனாளிகளுக்கு 6 மாத கால நீடிப்பும் வழங்கப்பட்டுள்ளது.

பரேட் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் திகதியை ஒத்திவைப்பதற்குப் பதிலாக, இந்த நீண்டகால பிரச்சனைக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுகள் காணப்படுவதை உறுதி செய்வதற்காக அரசாங்கம் பங்குதாரர் குழுக்களுடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளது.

அத்தோடு, வணிகங்களுக்கு நிவாரணம் என்பது கால நீட்டிப்பு மூலம் மட்டும் அல்ல என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட மற்றும் மத்திய வங்கியால் செயல்படுத்தப்பட்ட நிவாரண தொகுதியில், குறைந்த வட்டி விகிதங்கள், திருப்பிச் செலுத்தும் காலத்தை நீட்டித்தல், கடன் மதிப்பீடுகளில் தளர்வு மற்றும் மதிப்பீட்டு சர்ச்சைகளைத் தீர்ப்பதற்கான வெளிப்படையான பொறிமுறையை வழங்குதல் போன்ற பல முக்கியமான நடவடிக்கைகளும் அடங்கும்.

பொருளாதாரத்தில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் செயலூக்கமான பங்களிப்பை உறுதி செய்வதே இந்த நிவாரண நடவடிக்கைகளின் முக்கிய நோக்கம் என்றும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

 

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...