9 2
இலங்கைசெய்திகள்

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு விசேட கொடுப்பனவு

Share

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு விசேட கொடுப்பனவு

நாட்டில் அஸ்வெசும பெறும் பெற்றோர்களது மற்றும் சிறுவர் இல்லங்களில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை பெற்றுக் கொள்வதற்கான கொடுப்பனவுகளை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

குறித்த தீர்மானம் எதிர்வரும் பாடசாலை தவணையில் இருந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொருளாதார நெருக்கடியின் பாதகமான விளைவுகளால், பாடசாலை மாணவர்களின் கல்வியில் கணிசமான எதிர்மறையான தாக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், 55% பாடசாலை மாணவர்களின் கல்வியை அது மோசமாகப் பாதித்துள்ளதாகவும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த சதவீதம் கிராமப்புற மற்றும் தோட்டப் பகுதிகளில் அதிகமாக உள்ளது.

இதேவேளை, 53.2% பாதிக்கப்பட்ட குழந்தைகள் பாடசாலை உபகரணங்கள் வாங்குவதை குறைத்துள்ளனர் என்பதுடன் 26.1% பாடசாலை உபகரணங்களை மீண்டும் பயன்படுத்துகின்றனர்.

எனவே, பாடசாலை மாணவர்களின் கல்வியில் ஏற்படும் பாதகமான தாக்கத்தை குறைக்கும் நோக்கில், 2025 ஆம் ஆண்டு கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி பாடசாலை உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான கொடுப்பனவை வழங்கவுள்ளார்.

அதன்படி, பின்தங்கிய குடும்பங்களின் குழந்தைகள், நிவாரணத் திட்டத்தில் சேர்க்கப்படாத அனாதைக் குழந்தைகள், விசேட தேவையுடைய தாய் அல்லது தந்தையைக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள், மற்றும் அனாதை இல்லங்களில் கல்வி கற்கும் குழந்தைகளுக்கான பாடசாலை உபகரணங்களை கொள்வனவு செய்ய 6,000 ரூபா உதவித்தொகையாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

Share
தொடர்புடையது
articles2F6YDhCB6S7vQDq50VYCJH
இலங்கைசெய்திகள்

கடல்வளம் மற்றும் நீரியல் வளங்கள் பாதுகாப்புக்கு நவீன தொழில்நுட்பம்: அமைச்சர் சந்திரசேகர் உறுதி!

சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு இன்று கொழும்பு தாமரை கோபுரம் வளாகத்தில் ஆரம்பமான ‘அக்வா பிளான்ட்...

articles2F8wuyhpUNfptSJfoLRtVn
உலகம்செய்திகள்

அணுசக்தி பேச்சுவார்த்தையை மீளத் தொடங்க அமெரிக்காவை வற்புறுத்துமாறு சவுதியிடம் ஈரான் கோரிக்கை!

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியில் தடைபட்டிருந்த அணுசக்தி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க...

25 691962050dadd
செய்திகள்உலகம்

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகம்: MI5 எச்சரிக்கைக்கு மத்தியிலும் பிரதமர் ஒப்புதல்!

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகத்தை அமைக்கும் திட்டத்திற்கு, இங்கிலாந்துப் பிரதமர்...

image eb1947179c
அரசியல்இலங்கைசெய்திகள்

முதல் சந்தர்ப்பத்திலேயே அரசாங்கத்தைக் கவிழ்ப்போம்: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் – நாமல் ராஜபக்ஸ சவால்!

தற்போதைய அரசாங்கத்தை முதல் சந்தர்ப்பத்திலேயே கவிழ்ப்பதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...