9 2
இலங்கைசெய்திகள்

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு விசேட கொடுப்பனவு

Share

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு விசேட கொடுப்பனவு

நாட்டில் அஸ்வெசும பெறும் பெற்றோர்களது மற்றும் சிறுவர் இல்லங்களில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை பெற்றுக் கொள்வதற்கான கொடுப்பனவுகளை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

குறித்த தீர்மானம் எதிர்வரும் பாடசாலை தவணையில் இருந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொருளாதார நெருக்கடியின் பாதகமான விளைவுகளால், பாடசாலை மாணவர்களின் கல்வியில் கணிசமான எதிர்மறையான தாக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், 55% பாடசாலை மாணவர்களின் கல்வியை அது மோசமாகப் பாதித்துள்ளதாகவும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த சதவீதம் கிராமப்புற மற்றும் தோட்டப் பகுதிகளில் அதிகமாக உள்ளது.

இதேவேளை, 53.2% பாதிக்கப்பட்ட குழந்தைகள் பாடசாலை உபகரணங்கள் வாங்குவதை குறைத்துள்ளனர் என்பதுடன் 26.1% பாடசாலை உபகரணங்களை மீண்டும் பயன்படுத்துகின்றனர்.

எனவே, பாடசாலை மாணவர்களின் கல்வியில் ஏற்படும் பாதகமான தாக்கத்தை குறைக்கும் நோக்கில், 2025 ஆம் ஆண்டு கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி பாடசாலை உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான கொடுப்பனவை வழங்கவுள்ளார்.

அதன்படி, பின்தங்கிய குடும்பங்களின் குழந்தைகள், நிவாரணத் திட்டத்தில் சேர்க்கப்படாத அனாதைக் குழந்தைகள், விசேட தேவையுடைய தாய் அல்லது தந்தையைக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள், மற்றும் அனாதை இல்லங்களில் கல்வி கற்கும் குழந்தைகளுக்கான பாடசாலை உபகரணங்களை கொள்வனவு செய்ய 6,000 ரூபா உதவித்தொகையாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் முதியவர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம், இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் இன்று (மார்ச் 31, 2026) முதியவர் ஒருவரின் சடலம்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏண்ட்ரே ருடென்கோ உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வருகை!

ரஷ்ய அரசாங்கத்தின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏண்ட்ரே ருடென்கோ (Andrey Rudenko), 05 நாட்கள் உத்தியோகபூர்வ...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் வளர்ச்சி: மார்ச் மாதத்தில் மாத்திரம் 1.7 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை!

இலங்கையின் சுற்றுலாத்துறை நடப்பு ஆண்டில் பாரிய வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், கடந்த மார்ச்...

Untitled 64
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாநகர சபைகள் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது!

மீதொட்டமுல்ல “பொதுவில் கும்புர” எனும் காணியில் சட்டவிரோதமான முறையில் கழிவுகளைக் கொட்டியதன் மூலம், கொழும்பு மாநகர...