3 42
இலங்கைசெய்திகள்

பெருந்தோட்ட மக்களுக்கு புதிய வீடுகள்: அரசாங்கம் வெளியிட்டுள்ள நற்செய்தி

Share

பெருந்தோட்ட மக்களுக்கு புதிய வீடுகள்: அரசாங்கம் வெளியிட்டுள்ள நற்செய்தி

பெருந்தோட்ட மக்களுக்காக இந்த ஆண்டு 4,350 வீடுகள் கட்டப்படும் என்று பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன (Samantha Viddyarathna) தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சில் நேற்று (21) நடைபெற்ற பெருந்தோட்ட நிறுவனங்களின் மூத்த அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போது அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, பெருந்தோட்ட மக்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்தி அவர்களை வறுமையிலிருந்து விடுவிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்று அமைச்சர் சமந்த வித்யாரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னர், அரசியல் சலுகைகளின் அடிப்படையில் வீடுகள் கட்டப்பட்டு பெருந்தோட்ட மக்களுக்கு வழங்கப்பட்டதாகவும், புதிய அரசாங்கத்தின் கீழ், இந்த புதிய வீடுகள் தகுதியுடைய பெருந்தோட்ட மக்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நாட்டில் வீட்டு உரிமையாளர் விகிதம் 83.75 சதவீதமாக உள்ள அதே நேரத்தில் தோட்டங்களில் இது 5.6 சதவீதமாக மட்டுமே உள்ளது என்று அமைச்சர் சமந்த வித்யாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் 4350 வீடுகள் கட்டப்படும் என்றும் 2026 ஆம் ஆண்டில் மேலும் 4350 வீடுகள் கட்டப்பட்டு அந்த வீடுகளும் பெருந்தோட்ட மக்களுக்கு வழங்கப்படும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...