இலங்கைசெய்திகள்

பெருந்தோட்ட மக்களுக்கு புதிய வீடுகள்: அரசாங்கம் வெளியிட்டுள்ள நற்செய்தி

Share
3 42
Share

பெருந்தோட்ட மக்களுக்கு புதிய வீடுகள்: அரசாங்கம் வெளியிட்டுள்ள நற்செய்தி

பெருந்தோட்ட மக்களுக்காக இந்த ஆண்டு 4,350 வீடுகள் கட்டப்படும் என்று பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன (Samantha Viddyarathna) தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சில் நேற்று (21) நடைபெற்ற பெருந்தோட்ட நிறுவனங்களின் மூத்த அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போது அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, பெருந்தோட்ட மக்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்தி அவர்களை வறுமையிலிருந்து விடுவிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்று அமைச்சர் சமந்த வித்யாரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னர், அரசியல் சலுகைகளின் அடிப்படையில் வீடுகள் கட்டப்பட்டு பெருந்தோட்ட மக்களுக்கு வழங்கப்பட்டதாகவும், புதிய அரசாங்கத்தின் கீழ், இந்த புதிய வீடுகள் தகுதியுடைய பெருந்தோட்ட மக்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நாட்டில் வீட்டு உரிமையாளர் விகிதம் 83.75 சதவீதமாக உள்ள அதே நேரத்தில் தோட்டங்களில் இது 5.6 சதவீதமாக மட்டுமே உள்ளது என்று அமைச்சர் சமந்த வித்யாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் 4350 வீடுகள் கட்டப்படும் என்றும் 2026 ஆம் ஆண்டில் மேலும் 4350 வீடுகள் கட்டப்பட்டு அந்த வீடுகளும் பெருந்தோட்ட மக்களுக்கு வழங்கப்படும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...