இலங்கைசெய்திகள்

விவசாயிகளுக்காக அரசாங்கம் வெளியிட்டுள்ள நற்செய்தி

Share
16 24
Share

விவசாயிகளுக்காக அரசாங்கம் வெளியிட்டுள்ள நற்செய்தி

அடுத்த வருடம் முதல் ஒரு கிலோகிராம் நெல்லுக்கான உற்பத்திச் செலவு விஞ்ஞான ரீதியில் கணக்கிடப்பட்டு நெல் மற்றும் அரிசிக்கு உத்தரவாத விலை நிர்ணயம் செய்து விவசாயிகளுக்கு நியாயமான இலாபம் கிடைக்கும் என விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன (Namal Karunaratne) தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடம் மூன்று இலட்சம் மெட்ரிக் தொன் நெல்லை உத்தரவாத விலையில் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாகவும், நுகர்வோருக்கு அநீதி இழைக்காத வகையில் அரிசியின் விலையை நிலைநிறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அரசாங்கத்திற்குச் சொந்தமான 350 நெல் களஞ்சியசாலைகள் புனரமைப்புப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அரசாங்கத்திடம் உலர்த்தும் இயந்திரம் இல்லை என தெரிவித்த விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, அதற்கான பணிகளை முன்னைய அரசாங்கங்கள் செய்யாமையின் விளைவுகளை அனுபவிக்க நேரிட்டதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் உடனடி பதில்கள் இல்லையென்றாலும் அரசாங்கம் சிறு மற்றும் நடுத்தர ஆலை உரிமையாளர்களுடன் இணைந்து இந்த தருணத்தை சமாளித்து அடுத்த பருவத்தில் நியாயமான விலையில் நெல்லை கொள்வனவு செய்யும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share
Related Articles
2 13
இலங்கைசெய்திகள்

மாத்தளை உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள்!

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மாத்தளை- தம்புள்ள நகர சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது...

2 16
இலங்கைசெய்திகள்

பதுளை மாவட்ட இறுதி தேர்தல் முடிவுகள்..

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பதுளை மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வெளியாகியுள்ளன. இதற்கமைய தேசிய மக்கள்...

2 15
இலங்கைசெய்திகள்

மன்னார் மாவட்டத்தின் இறுதி முடிவுகள்!

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மன்னார் மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன. இதற்கமைய மன்னார் பிரதேச...

2 14
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி சபைத் தேர்தலின் குருநாகல் மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள்

குருநாகல் – கிரிபாவ பிரதேச சபை நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் குருநாகல் –...