16 24
இலங்கைசெய்திகள்

விவசாயிகளுக்காக அரசாங்கம் வெளியிட்டுள்ள நற்செய்தி

Share

விவசாயிகளுக்காக அரசாங்கம் வெளியிட்டுள்ள நற்செய்தி

அடுத்த வருடம் முதல் ஒரு கிலோகிராம் நெல்லுக்கான உற்பத்திச் செலவு விஞ்ஞான ரீதியில் கணக்கிடப்பட்டு நெல் மற்றும் அரிசிக்கு உத்தரவாத விலை நிர்ணயம் செய்து விவசாயிகளுக்கு நியாயமான இலாபம் கிடைக்கும் என விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன (Namal Karunaratne) தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடம் மூன்று இலட்சம் மெட்ரிக் தொன் நெல்லை உத்தரவாத விலையில் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாகவும், நுகர்வோருக்கு அநீதி இழைக்காத வகையில் அரிசியின் விலையை நிலைநிறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அரசாங்கத்திற்குச் சொந்தமான 350 நெல் களஞ்சியசாலைகள் புனரமைப்புப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அரசாங்கத்திடம் உலர்த்தும் இயந்திரம் இல்லை என தெரிவித்த விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, அதற்கான பணிகளை முன்னைய அரசாங்கங்கள் செய்யாமையின் விளைவுகளை அனுபவிக்க நேரிட்டதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் உடனடி பதில்கள் இல்லையென்றாலும் அரசாங்கம் சிறு மற்றும் நடுத்தர ஆலை உரிமையாளர்களுடன் இணைந்து இந்த தருணத்தை சமாளித்து அடுத்த பருவத்தில் நியாயமான விலையில் நெல்லை கொள்வனவு செய்யும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...