16 24
இலங்கைசெய்திகள்

விவசாயிகளுக்காக அரசாங்கம் வெளியிட்டுள்ள நற்செய்தி

Share

விவசாயிகளுக்காக அரசாங்கம் வெளியிட்டுள்ள நற்செய்தி

அடுத்த வருடம் முதல் ஒரு கிலோகிராம் நெல்லுக்கான உற்பத்திச் செலவு விஞ்ஞான ரீதியில் கணக்கிடப்பட்டு நெல் மற்றும் அரிசிக்கு உத்தரவாத விலை நிர்ணயம் செய்து விவசாயிகளுக்கு நியாயமான இலாபம் கிடைக்கும் என விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன (Namal Karunaratne) தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடம் மூன்று இலட்சம் மெட்ரிக் தொன் நெல்லை உத்தரவாத விலையில் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாகவும், நுகர்வோருக்கு அநீதி இழைக்காத வகையில் அரிசியின் விலையை நிலைநிறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அரசாங்கத்திற்குச் சொந்தமான 350 நெல் களஞ்சியசாலைகள் புனரமைப்புப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அரசாங்கத்திடம் உலர்த்தும் இயந்திரம் இல்லை என தெரிவித்த விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, அதற்கான பணிகளை முன்னைய அரசாங்கங்கள் செய்யாமையின் விளைவுகளை அனுபவிக்க நேரிட்டதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் உடனடி பதில்கள் இல்லையென்றாலும் அரசாங்கம் சிறு மற்றும் நடுத்தர ஆலை உரிமையாளர்களுடன் இணைந்து இந்த தருணத்தை சமாளித்து அடுத்த பருவத்தில் நியாயமான விலையில் நெல்லை கொள்வனவு செய்யும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
GettyImages 1202240221
செய்திகள்உலகம்

மார்ச் 20-ல் வெளியாகிறது புதிய BTS அல்பம் – உலகச் சுற்றுப்பயணத்திற்கும் தயார்!

உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ள தென் கொரியாவின் புகழ்பெற்ற கே-பாப் (K-pop) இசைக் குழுவான BTS,...

44520176 vijay33
செய்திகள்இந்தியா

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: த.வெ.க. தலைவர் விஜய்க்கு சி.பி.ஐ. அழைப்பாணை – ஜனவரி 12-ல் விசாரணை!

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) பிரசாரத்தின் போது...

gold 5
செய்திகள்இலங்கை

தொடர்ந்து உயரும் தங்கம்: இன்றும் பவுணுக்கு 3,000 ரூபாய் அதிகரிப்பு – புதிய விலைப் பட்டியல் இதோ!

இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியான ஏற்றத்தைக் கண்டு வருகின்றது. நேற்று (05)...

1739116331 energy min
இலங்கைஏனையவைசெய்திகள்

மூன்று ஆண்டுகளில் 30% கட்டணக் குறைப்பு: நாடாளுமன்றத்தில் அமைச்சர் குமார ஜயகொடி உறுதி!

வாக்குறுதியளித்தபடி மூன்று ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கும் இலக்கை நோக்கி அரசாங்கம்...