கட்டுநாயக்கவில் மோசமான செயலில் ஈடுபட்ட இளம் பெண்
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்கவில் மோசமான செயலில் ஈடுபட்ட இளம் பெண்

Share

கட்டுநாயக்கவில் மோசமான செயலில் ஈடுபட்ட இளம் பெண்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சட்டவிரோதமான முறையில் பெண் ஒருவரால் எடுத்துச் செல்ல முயன்ற 05 கிலோ எடையுள்ள ஜெல் வடிவ 04 தங்க பொதிகளை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

விமான நிலையத்தில் உள்ள வரியில்லா வணிக நிலையம்(duty-free shopping) ஒன்றில் பணிப்புரியும் 24 வயதுடைய பெண் ஒருவரை சந்தேகத்தின் பேரில் நேற்றைய தினம்(04.07.2023) சோதனையிட்டபோதே குறித்த தங்க பொதிகள் மீட்கப்பட்டதாக விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்,

விமான நிலையத்தில் உள்ள வரியில்லா வணிக நிலையம் ஒன்றில் பணிப்புரியும் 24 வயதுடைய பெண் நேற்று காலை விமான நிலைய வளாகத்தில் இருந்து சட்ட விரோத தங்க பொதிகளை எடுத்து செல்ல முயற்சித்துள்ளார்.

இந்த யுவதி கட்டுநாயக்க விமான நிலைய வரியில்லா வணிக நிலையத்தில், அழகு சாதனப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் பணிபுரிகிறார்.

இந்நிலையில் அவரின் செயற்பாடு குறித்து சந்தேகம் எழுந்ததோடு அவரின் செயற்பாடுகளை சிசிடிவி கருவி மூலம் பார்வையிட ஆரம்பித்தோம்.

அவர் நேற்று காலை 08.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே செல்ல முயற்சித்த போது, 05 கிலோவிற்கும் அதிகமான தங்க ஜெல் அடங்கிய 04 பொதிகளை தனது ஆடைக்குள் மறைத்து வைத்துள்ளார்.

இவரின் செயல்கள் தொடர்பில் எழுந்த சந்தேகத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே குறித்த சட்டவிரோத தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.” என தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட பெண் மற்றும் சட்டவிரோத தங்க பொதிகளை சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்ததோடு மேலதிக விசாரணைகளை சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...