24 667f7cfe0ff26 25
இலங்கைசெய்திகள்

வீதியில் செல்லும் பெண்களிடம் நகைகளை அறுக்கும் நகைக்கடை உரிமையாளர் கைது

Share

வீதியில் செல்லும் பெண்களிடம் நகைகளை அறுக்கும் நகைக்கடை உரிமையாளர் கைது

நெடுஞ்சாலையில் பயணிக்கும் பெண்களின் கழுத்தில் வாளை வைத்து அச்சுறுத்தி அவர்கள் அணிந்திருக்கும் தங்க நகைகளை கொள்ளையடிக்கும் கும்பலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படும் தங்க நகைக்கடை உரிமையாளர் மற்றும் பெண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருடப்பட்ட சில தங்க ஆபரணங்கள், வாள், மோட்டார் சைக்கிள் மற்றும் கைக்குண்டு போன்றவற்றையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சில காலமாக மரதகஹமுல துனகஹாவை சுற்றியுள்ள கிராமங்களில் வீதிகளில் பயணிக்கும் பெண்களிடம் தங்க ஆபரணங்கள் திருடப்படுவதாக செய்திகள் வெளியாகி வந்தன.

இதன்படி, பாலியபிட்டிய பிரதேசத்தில் இரண்டு தங்கச் சங்கிலிகளை அறுத்துக்கொண்டு ஓடிய மோட்டார் சைக்கிளை துரத்திச் சென்ற காவல்துறை குழு, படல்கம காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஹொரகண்டவில பிரதேசத்தில் சந்தேகநபர்கள் இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள் லொறியுடன் மோதி கவிழ்ந்தது.

அதன்போது, ​​பிரதேச மக்களின் உதவியுடன் கொள்ளையர்களை கைது செய்துள்ளதாகவும், மோட்டார் சைக்கிளும் பலத்த சேதமடைந்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

மினுவாங்கொடை, ஹொரம்பெல்ல பிரதேசத்தில் தற்காலிகமாக வசிக்கும் மீரிகம ஹல்பே பிரதேசத்தை சேர்ந்த ஒருவரும், ஜா அல பிரதேசத்தை சேர்ந்த ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
1276730 0.jpeg
செய்திகள்உலகம்

ஈரான் சிறைப்பிடித்த எண்ணெய்க் கப்பல் ‘தலாரா’ விடுவிப்பு: 21 பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்!

ஹாா்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் கடந்த வாரம் சிறைப்பிடித்த, மாா்ஷல் தீவுகளின் கொடியேற்றப்பட்ட ‘தலாரா’ (Talara)...

pm modi 13 20251119144744
இந்தியாசெய்திகள்

ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்குப் பயணம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்கு விஜயம் செய்யத் தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன....

images 5 7
செய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: கால் தவறி கிணற்றில் வீழ்ந்த வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் நபரொருவர் கால் தவறி கிணற்றுக்குள் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்...

images 4 8
இலங்கைசெய்திகள்

அரச மருத்துவமனைகளில் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு: சிகிச்சை சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

அரச மருத்துவமனைகளில் சுமார் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...