tamilni 205 scaled
இலங்கைசெய்திகள்

வெள்ளவத்தை பெண்ணுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிங்கள இளைஞன்

Share

வெள்ளவத்தை பெண்ணுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிங்கள இளைஞன்

வெள்ளவத்தையில் சிங்கள இளைஞன் ஒருவரின் செயற்பாடு குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகிறது.

கல்கிஸ்சையில் இருந்து முச்சக்கரவண்டி மூலம் வெள்ளவத்தைக்கு சென்ற பெண் ஒருவர் தங்க நகை ஒன்றை தவற விட்டுள்ளார்.

சுமார் பத்து இலட்சம் ரூபா பெறுமதியான தங்க செயின் ஒன்றே இவ்வாறு தவறவிடப்பட்டுள்ளது. ubar வலையமைப்பு ஊடாக பதிவு செய்யப்பட்ட சம்பத் என்ற சாரதியின் முச்சக்கர வண்டியில் குறித்த பெண் பயணித்துள்ளார்.

எனினும் பாதிக்கப்பட்டவர்கள் ubarயை தொடர்பு கொண்டு சம்பத் என்ற சாரதியிடம் இது குறித்து தெரிவித்துள்ளனர்.

தவறவிடப்பட்ட தங்க செயின் தன்னிடம் இருப்பதாகவும் கொண்டு வந்து தருவதாகவும் குறித்த சாரதி தெரிவித்துள்ளார்.

சொன்னது போன்று உரிய விலாசத்திற்கு கொண்டு வந்த தங்க செயினை சாரதி கொடுத்துள்ளதாக, நகையின் உரிமையாளர் சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மக்களை ஏமாற்றி பிழைக்கும் இந்தக்காலத்தில் பத்து இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகையை கொண்டு வந்த கொடுத்த குறித்த சாரதி நேர்மையின் உச்சம் என பலரும் பாராட்டியுள்ளனர்.

Share
தொடர்புடையது
articles2FnSTUZZcRP8myiGgD1k41
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாவற்குழியில் மணல் டிப்பர் விபத்து: கிளிநொச்சியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – மன்னார் வீதியின் தென்மராட்சி, நாவற்குழி பகுதியில் இன்று (15) அதிகாலை இடம்பெற்ற கோர...

image b42613d114
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொரள்ளை தேவாலய குண்டு வைப்பு: மீண்டும் விசாரணையை ஆரம்பியுங்கள் – கத்தோலிக்க திருச்சபை அரசாங்கத்திடம் வலியுறுத்தல்!

கொழும்பு, பொரள்ளையில் அமைந்துள்ள அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் (All Saints’ Church) வெடிகுண்டு வைக்கப்பட்ட சம்பவத்தின்...

1768450480 israel 6
செய்திகள்உலகம்

இஸ்ரேல் வாழ் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு: தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் எனத் தூதரகம் அறிவுறுத்தல்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பு...

MediaFile 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி முகத்திடலில் பரபரப்பு: மின்கம்பத்தில் ஏறி நபர் ஒருவர் போராட்டம்!

கொழும்பு, காலி முகத்திடல் (Galle Face) வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர்...