tamilni 77 scaled
இலங்கைசெய்திகள்

வெள்ளவத்தை தமிழ் மக்களுக்கு எச்சரிக்கை

Share

வெள்ளவத்தையில் உள்ள தொலைபேசி நிலையமொன்றில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் போன்று வேடமணிந்து கொள்ளையில் ஈடுபட்ட கடற்படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பணம் மற்றும் பெறுமதியான கையடக்க தொலைபேசியை திருடிய இலங்கை கடற்படை அதிகாரிகள் நால்வர் இன்று அதிகாலை வெள்ளவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

பத்தேகம, பொரலஸ்கமுவ, கொடகவெல, பிபில பகுதிகளைச் சேர்ந்த 37 தொடக்கம் 38 வயத்திற்குட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

முறைப்பாட்டாளர் வெள்ளவத்தை பிரதேசத்தில் இரவு பகலாக இயங்கும் தொலைபேசி நிலையம் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

நேற்று இரவு இனந்தெரியாத நால்வர் வந்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் அடையாள அட்டையை காட்டி நிறுவனத்தை பரிசோதிக்க வேண்டும் என கூறியுள்ளார். அதற்கமைய, நிலையத்தை திறக்குமாறு ஊழியர்களை திறக்குமாறு கூறியுள்ளனர்.

கதவைத் திறந்து கொண்டு நிறுவனத்திற்குள் நுழைந்த அவர்கள் திடீரென ஊழியர்களுக்கு கத்தியை காட்டி கொலைமிரட்டல் விடுத்ததுடன் 670,000 ரூபாய் பணத்தையும் கொள்ளையிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

Share
தொடர்புடையது
image 1200x630 7
செய்திகள்அரசியல்இலங்கை

சர்வதேச குற்றவியல் விசாரணையை சரத் பொன்சேகா வலியுறுத்த வேண்டும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இறுதி யுத்தத்தில் நடந்த விடயங்கள் தொடர்பில் உண்மையாகவே சாட்சியம்...

image 1000x1000 4
செய்திகள்இலங்கை

ஸ்ரீலங்கன் விமானத்தில் இருந்து பிரபல பாடகர் வலுக்கட்டாயமாக வெளியேற்றம்

டுபாய்க்குப் பயணிக்கவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்து இலங்கையின் பிரபல பாடகர் சாமர ரணவக்க என்பவர்...

image 1000x1000 3 1
செய்திகள்இலங்கை

பாடசாலை செல்லாத கோபம்: மாணவியைத் தாக்கிய அதிபர் மீது காவல்துறை விசாரணை

ஒரு நாள் பாடசாலைக்குச் செல்லாததால் ஏற்பட்ட கோபத்தில், மாணவி ஒருவரைத் தடியால் தாக்கியதாகக் கூறப்படும் அதிபர்...

image 1000x1000 2
செய்திகள்இலங்கை

கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்திக்கு ஊடகங்கள் அளித்த முக்கியத்துவம் – பேராசிரியர் கடும் விமர்சனம்

நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ படுகொலையின் முக்கிய சூத்திரதாரியான இஷாரா...